எது தமிழ்ப்புத்தாண்டு?

பார்ப்பனர்களுக்குப் பதிலடி(1)! பிரித்தாளும் நரியே,போற்றி!

பார்ப்பனர்களுக்கு அதிகாரப் பூர்வமற்ற சதிகாரத் தலைவர் இப்பொழுது திருவாளர் சோ ராமசாமி அய்யர்தான். அவருடைய துக்ளக் இதழும் பார்ப்பன சங்கத்தின் அதிகார பூர்வமற்ற வார இதழாக வெளி வந்து கொண்டிருக்கிறது.

தமிழக அந்தணர் வரலாறு என்னும் நூலை எழுதிய கே.சி. இலட்சுமிநாரா யணன் என்ற பார்ப்பனர், தேசத் துரோக அமைப்பு எனும் தலைப்பில் நீதிக்கட்சியையும் திராவிட இயக்கத் தையும், அதன் ஒப்புயர்வற்ற தலைவர் களையும் கொச்சைப்படுத்தி எழுதும் தொடர் ஒன்றை துக்ளக்கில் (6.7.2011) தொடங்கியுள்ளார். எடுத்த எடுப் பிலேயே பார்ப்பனர்களுக்கே உரித்தான பிரித்தாளும் நரித் தந்திரம்!

திராவிட இயக்கத்தைப் பற்றித் தாக்க ஆரம்பித்தால், அண்ணா என்ற பெயரையும், திராவிட என்ற சொல்லை யும் தாங்கியுள்ள அண்ணா தி.மு.வையும் சேர்த்துத் தாக்குவதாக ஆகிவிடுமே -அது கூடாதே, - தங்கள் இனத்தைச் சேர்ந்த ஜெயலலிதா அம்மையாரைக் காப்பாற்ற வேண்டுமே, தூசு ஒன்று அவர் மேனியில் விழுந்துவிடலாமா என்பதில் சர்வ ஜாக்கிரதையாக இருக் கக் கூடியவர்களாயிற்றே! அதற்காக என்ன ஜாலம் தெரியுமா?

எம்.ஜி.ஆர்.நிறுவிய அ.இ.அ.தி.மு.க. வைத் திராவிடக் கட்சிகளில் ஒன்றாகக் கருதுவது சரியல்லவாம்.

ஹிட்லர் ஒரு பாவமும் அறியாத யூதர்களைக் கொலை செய்தைப் போல் குற்றமற்ற பிராமணர்களைத் துவேஷிப் பது திராவிடக் கட்சிகளின் தலையாய தீய குணாம்சங்களில் ஒன்று. இந்தக் குணம் எம்.ஜி.ஆரிடம் சிறிதுகூடக் கிடையாது.

தனித்திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடுவதாக 1963 ஆம் ஆண்டில் அறிவித்த பிறகும் இன்று வரையில் தமிழ்நாட்டில் பிரிவினை இயக்கங் களுக்கு நேரிடையாகவும், மறைமுக மாகவும் ஆதரவு அளித்து வருவது திராவிடக் கட்சிகளின் மற்றொரு குணாம்சம். இந்தக் குணாம்சம் எம்.ஜி.ஆரிடம் காணப்பட்டதில்லை.

இவர்களின் பகுத்தறிவுக்குப் பொருந்தாதவை என்று சொல்லப்படும் இஸ்லாம், கிறிஸ்துவம் போன்ற மதங்களின் பண்டிகைகளையும், சம்பிர தாயங்களையும் தயக்கம் இல்லாமல் ஏற்றுக் கொண்டு, ஹிந்து சமயத்தின் சடங்குகள், விழாக்கள் போன்றவற்றை மட்டும் இகழ்வது திராவிடக் கட்சிகளின் இன்னொரு தீய குணாம்சம். இதனையும் எம்.ஜி.ஆர். ஒருபோதும் ஏற்றுக் கொண்டவர் அல்லர்.

எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசான ஜெயலலிதாவும், இந்தத் தீய குணங் களில் ஒன்று கூட இல்லாதவர். எனவேதான் அ.இ.அ.தி.மு.க.வை ஒரு திராவிடக் கட்சியாகக் கருதுவது பிழையானது என்று இந்தத் தொடரில் முதலில் தெளிவு படுத்த விரும்புகிறேன் என்ற பீடி கையுடன் தொடரைத் தொடங்கியுள்ளார்.

இதில் அ.இ.அ.தி.மு.கவை புகழ் கிறாரா? இகழ்கிறாரா? அ.இ.அ.தி.மு.க திராவிடக் கட்சி அல்ல என்று அய்யர்வாள் எழுதுவதை அ.இ.அ.தி.மு.க தலைமை ஏற்றுக் கொள்கிறதா?

ஏற்றுக் கொள்கிறது என்றால் முதலில் அண்ணாவின் பெயரையும், உருவத்தையும், திராவிட என்ற இனச் சுட்டுப் பெயரையும் கட்சியிலிருந்தும், கொடியிலிருந்தும் தூக்கி எறிய வேண்டுமே, செய்வார்களா?

இல்லை - இல்லை. அ.இ.அ.தி.மு.க. அசல் திராவிட இயக்கம்தான்; அண்ணா எங்கள் வழிகாட்டிதான் என்று சொல்லுவார்களேயானால், துக்ளக்கில் வெளி வந்திருக்கும் இந்தத் தொடரை எதிர்த்து முதல் குரல் கொடுத்திருக்க வேண்டும் - அவர்களின் அதிகாரபூர்வ நமது எம்.ஜி.ஆர். ஏட்டில் மறுப்பும் தெரிவித்திருக்க வேண்டுமே -_ இதுவரை செய்ய வில்லையே -_ ஏன்?

அ.இ.அ.தி.மு.க.வில் கொள்கை உள்ள ஒரே ஒரு தோழர் கூட இல்லாதபடி அற்றுப் போய்விட்டனர் என்பதுதான் பரிதாபகரமான பெரும் உண்மை!

சட்டமன்றத்திலேயே தன்னை ஒரு பாப்பாத்தி என்று பிரகடனப்படுத் தியவர் எப்படி திராவிட முத்திரையைக் குத்திக் கொள்ள ஆசைப்படுவார்?

எம்.ஜி.ஆரைப் புகழ்வது போல இகழும் இடக்கரடக்கலையும் காணத் தவறக்கூடாது. தமிழ்நாட்டில் பிரிவினை இயக்கங்களுக்கு நேரடியாகவும், மறைமுக மாகவும் ஆதரவு அளித்து வருவது திராவிடக் கட்சிகளின் மற்றொரு குணாம்சம். இந்தக் குணாம்சமும் எம்.ஜி.ஆரிடம் காணப்பட்டதில்லை என்று பேனா பிடிக்கிறாரே - அது உண்மைதானா?

மாநில சுயாட்சிக்காக இந்தியாவின் இராணுவத்தையும் சந்திக்கத் தயார் என்று சொன்னவர் எம்.ஜி.ஆர். அல்லவா? இதில் நேரிடையாக பிரி வினை வாதம் இருக்கிறதா அல்லது மறைமுகமாகப் பிரிவினை வாதம் கமழ்கிறதா என்பதை திருவாளர் லட்சுமி நாராயண அய்யர்வாளுக்கே விட்டுவிடுவோம். தன் கருத்தை இன்னொருவர் மீது சுமத்துவது என்பது நாலாந்தரமான குணாம்சமாகும்.

பெரும்பாலானவர்கள் தீர்ப்புப்படி மக்களாட்சி அமைகிறது. ஆனாலும் வடபுலம் அளிக்கிற ஒரு தீர்ப்புக்குத் தான் தென்னாடு கட்டுப்பட வேண்டி யிருக்கும் என்று அண்ணா கூறியது உண்மை என்று இப்பொழுது நிரூபிக்கப் பட்டுவிட்டது என்று பாளையங் கோட்டையில் பேசியவரும் இதே எம்.ஜி.ஆர்.தான் (9-_6_-1977).

இதில் நேர்முகமாக பிரிவினை வாடை வீசுகிறதா என்பதை முடிவு செய்வதையும் இந்த அய்யர்வாளுக்கே விட்டுவிடுவோமாக. இதே துக்ளக் இதழை வம்பில் இழுத்துவிடும் ஒரு வேலையை விவரம் தெரியாமல் லட்சுமி நாராயணன் செய்துள்ளார்.

ஹிந்து மதத்தின் சடங்குகள், விழாக்கள் போன்றவற்றை மட்டும் இகழ்வது திராவிடக் கட்சிகளின் இன் னொரு தீய குணாம்சம். இதனையும் எம்.ஜி.ஆர். ஒரு போதும் ஏற்றுக் கொண்டவர் அல்லர் என்று நீட்டி முழங்குகிறாரே _ அதற்கும் ஒரு ஆப்பு!

சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மாண்பு மிகு எம்.ஜி.ஆர். ஒரு சூடு கொடுத்தார் பாருங்கள்.

மருத்துவத்தால் குணமாகாத நோய்களைஅய்யப்பன் கோயில் திருநீறு குணமாக்கிவிடும் என்ற நம்பிக்கையை சிலர் பரப்பி வருகின்றனர். இந்த எண்ணம் வலுப் பெறுமானால், பிறகு மருத்துவமனைகளை இழுத்து மூடிவிட்டு, டாக்டர்களை விபூதி விற்பனையாளர்களாக நியமிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

கடவுள் நம்பிக்கை அறிவியல் துறையில் தலையிட்டு பாமர மக்களைக் கெடுத்துவிடக் கூடாது. படித்தவர்களே இப்படி நடந்து கொள்கிறார்கள் . இப்படி கோவிலுக்குச் செலவழிக்கும் பணத்தை மருத்துவமனைகளுக்குக் கொடுத்துதவினால் எத்தனையோ ஏழை நோயாளிகள் குணம் அடை வார்கள்.

டாக்டர்களின் திறமைக்கு உத்தர வாதம் வேண்டும்; அவர்களின் திற மையைக் கேவலப்படுத்தும் வகையில் திருநீறு குணமாக்கிவிடும் என்று சொல்பவர்களை என்ன சொல்லுவது? என்று பேசினாரே.

இது இந்துமதக் கடவுள் அய்யப் பனைப் பற்றியும், இந்து மதத்தின் திருநீறு குறித்தும் எம்.ஜி.ஆர். கேலி செய்வதாக ஆகாதா? என்ற கேள்வியும் அய்யர்வாளுக்கே அர்ப்பணம்!

இன்றைக்குத் துக்ளக்கில் எம்.ஜி.ஆரைத் தூக்கிப் பிடித்து, திராவிட இயக்கத்திலிருந்து அவரைத் தனிமைப்படுத்தி, இந்து மத சம்பிர தாயங்களை ஏற்றுக் கொண்டவர் என்று ஜிகினா வேலை செய்ய, படாத பாடு படுகிறாரே; இதே துக்ளக் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தெரிவித்த கருத்து குறித்து எவ்வளவு துள்ளு துள்ளியது தெரியுமா? ஒரு முதல்வர் இப்படிப் பேசலாமா? என்று எகிறிக் குதித்ததே. ஒரு படி மேலே போய் (துக்ளக் 1_2_-1979) எம்.ஜி.ஆர். தெரிவித்த கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று துக்ளக் சிறப்புக் கட்டுரையும் எழுதியதே!

மக்கள் மறந்தாலும், கருஞ்சட்டைக் காரன் மறக்க மாட்டானே!

குற்றமற்ற பிராமணர்களைத் துவேஷிப்பது திராவிடக் கட்சிகளின் தலையாய தீயகுணங்களில் ஒன்று. இந்தக் குணம் எம்.ஜி.ஆரிடம் சிறிது கூடக் கிடையாது என்றும் கதைக்கிறார்.

பிராமணன் என்று சொல்லுவதே அடுத்தவர்களைத் துவேஷிப்பதுதானே! பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் பிரா மணன்,காலில் பிறந்தவன் சூத்திரன்! சூத்திரன் என்றால் வேசி மகன் என்பது (மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415) அடுத்தவர்களை இழிவுபடுத்துவது தானே!

உலகத்தின் எந்த நாட்டிலாவது, எந்த மதத்திலாவது தங்களைத் தவிர மற்றவர்களைப் பார்த்து பிறவியிலேயே வேசி மக்கள் என்று கூறுவதுண்டா? இந்த யோக்கியதை உள்ளவர்கள் குற்றமற்ற பிராமணர்களாம். இந்த இழிவைப் பொறுக்காது எதிர்த்துக் கேட்டால் அதற்குப் பெயர் துவேஷிப்பதாம்.

தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தாங்களே துவேஷிகளாக இருந்து கொண்டு மற்றவர்களைப் பார்த்து துவேஷிகள் என்று சொல்லுவார்கள் என்று லாலா லஜபதிராய் சொன் னாரே, அதுதான் நினைவுக்கு வருகிறது.

சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி என்னும் தன்மான இயக்கப் புயல் மய்யம் கொண்ட பிறகுதானே சூத்திரச்சி வேலைக்கு வந்தாளா? என்று கேட்கும் ஆணவத்தின் முது கெலும்பு முறிக்கப்பட்டது.

இன்றைக்குக் கூட தாழ்த்தப்பட்ட வர்கள் உட்பட இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்து ஜாதியினரும் உரிய பயிற்சி பெற்று அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் செய்தால் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை பார்ப்பனர்கள் சென்று தடை வாங்குகிறார்கள் என்றால் அவர்கள் உள்ளத்தில் தேக்கி வைத்திருக்கும் அந்தத் துவேஷ நஞ்சுதானே காரணம்?

இந்த வெட்கக்கேட்டில் குற்றமற்ற பிராமணர்கள் என்ற அடைமொழி வேறு. கண்ணற்றவருக்குக் கண்ணாயி ரம் என்று பெயர் வைப்பதில்லையா -_ அதுபோல்தான் இதுவும்.

கடவுளுக்கு மேலே பிராமணர்கள் என்று மார்தட்டும் அவர்களின் லோகக் குருகூட ஒழுக்கவாதியாக இருக்க முடியவில்லையே! கொலைக்குற்றம் - அத்து மீறிய பாலியல் குரூரம் என்ற கொச்சைத் தனத்தை மூட்டை கட்டிக் கொண்டு தோளில் போட்டுக் கொண்டு அல்லவா வெட்கமில்லாமல் திரிகிறார். ஜெயேந்திரர்! இவ்வளவு நடந்துள்ள போதிலும் இன்னும் அவர் சுவாமிகள் தானாம்!

இந்த யோக்கியதை உள்ளவர்களுக் குப் பேனா பிடிப்பு ஒரு கேடா?

சென்னை பாலர் அரங்கில் ஒரு ஜாதி மறுப்புத் திருமணம் (28-_6_-1970 ஞாயிறு). நரிக்குறவர் குடும்பத்தைச் சேர்ந்த எல். ஆறுமுகம் சிங் மகளுக்கும், வீரசைவ குடும்பத்தைச் சேர்ந்த ஏ.கே. ரகுபதிக்கும் ஜாதிமறுப்புத் திருமணம் எம்.ஜி.ஆர். தலைமையில் நடைபெற்றது. பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் என்.வி.நடராசன் அவர்களும் அவ் விழாவில் கலந்து கொண்டார்.

அப்பொழுது எம்.ஜி.ஆர்.பேசினார்.

இந்த மணவிழா அய்யா முன்னி லையில், அண்ணா வாழ்த்து வழங்கி நடைபெற வேண்டியதாகும். எவ்வளவு தான் சட்டம், கண்டிப்பு வந்தாலும் உள்ளத்தில் மாறுதல் ஏற்பட்டால்தான் அது பயன்படும். தந்தை பெரியார் அவர்கள் இந்த சமுதாய சீர்திருத்தப் பணியை துவக்கிய காலம். பலத்த எதிர்ப்பும், ஏளனமும் மிகுந்த காலம். இன்று அவர்கள் வாழ் நாளிலேயே அவரது கொள்கைளின் வெற்றிகளைக் காணும் பெருமித நிலையில் உள்ளார் கள். சமூகத்தில் ஒரு சிலர் ஆதிக்கம் பெறத்தான் ஜாதி புகுத்தப்பட்டது.

ஆதிக்கக்காரர்கள் எதிர்ப்பை சமா ளித்து இன்று அய்யா வெற்றி பெற்று இருக்கிறார். உள்ளத்தில் மாறுதல் ஏற் படுத்துவது என்பது பெருஞ்சாதனை யாகும். உயர்ஜாதிக்காரர்கள் என்றால் அவர்கள் ஒழுக்கவாதிகள் என்பதல்ல பொருள். வாழ்க்கையை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதே முக்கியம்.

இந்த மணமக்கள் சமுதாய மாறுதலுக்குத் தக்க அடை யாளமாகத் திகழ்கிறார்கள். அய்யா அவர்களது தியாகத்திற்குத் தலை வணங்குவதுதான், மரியாதை செலுத்து வதுதான் இத்தகைய விழாவில் நம் கடமையாகும் என்று பேசியவர் எம்.ஜி.ஆர். இதில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை, கோட் பாடுகளை எந்த அளவு உள்ளத்தில் தாங்கி இருந்தார் என்பது விளங்க வில்லையா?

உயர்ஜாதி ஆதிக்கம்பற்றியும், ஒழுக்கத்திற்கும் உயர் ஜாதிக்கும் சம்பந் தம் இல்லை என்றும் சொல்கிறாரே - அந்த உயர்ஜாதி என்று யாரைக் குறிப்பிடுகிறார். உயர்ஜாதி ஆதிக்கம் என்று அழுத்திச் சொல்லுகிறாரே - இதற்கு என்ன பொருள் என்று முடிவு கட்டுவதையும் திருவாளர் லட்சுமி நாராயண் அய்யர் வாளுக்கே சமர்ப் பணம்!

எம்.ஜி.ஆர். அவர்களை, திராவிட இயக்கத்திலிருந்து பிரித்து, நம்மோடு மோதவிடப் பார்க்கிறது அக்கிரகாரம். அதன் நிலை என்ன? அவர்கள் மனித உருவில் திரியும் நரிகள் என்று இப் பொழுது அம்பலப்பட்டதுதான் மிச்சம்.

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி(2) போயும் போயும் ம.பொ.சி.தான் கிடைத்தாரா?

வடபுலத்தில் தேசிய காங்கிரஸ் மகாசபைக்கு எதிராக முஸ்லிம் லீக்கைத் தோற்றுவிப்பதிலே வெற்றி கண்டது போல, தென்புலத்தில் பிராமணரல்லாதார் கட்சியைத் தோற்றுவிப்பதிலே, இந்திய வைஸ் ராயும், சென்னை மாகாண கவர்ன ரும் வெற்றி கண்டனர் என்று சிலம் புச் செல்வர் ம.பொ.சிவஞானம் எழுதியுள்ளார். (துக்ளக் 6-7-2011) என்று திருவாளர் கே.சி. லட்சுமி நாராயண அய்யர்வாள் எடுத்துக் காட்டியுள்ளார்!

இவர்களுக்குப் போயும் போயும் ம.பொ.சி. தான் கைக் கருவியாகக் கிடைத்துள்ளாரா?

திராவிட இயக்கத்தைத் தேசத் துரோக அமைப்பு என்று குற்றம் சாட்டும்போது, திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்திய ம.பொ.சி.யைத்தானே தேடிப் பிடிப்பார்கள்?

இதில் ஒரு பரிதாபம் என்ன தெரியுமா? காலம் பூராவும் திராவிட இக்கத்தைத் திட்டிக் காலம் கழித்த ம.பொ.சி. அவர்கள் கடைசிக் காலத்தில் திராவிட இயக்கத்தினி டத்தில் தான் சரண் அடைந்தார் என்பதுதான் அந்தப் பரிதாபம்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு பெற்றவராக தி.மு.க. சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நின்றுதான் வெற்றி பெற்றார்!

காலம் காலமாக காங்கிரஸ்காரன் என்று தன்னைச் சொல்லிக் கொண்ட அவருக்குக் காங்கிரசில் எந்தப் பதவியும் கிட்டவில்லை. திராவிட இயக்க ஆட்சிக் காலத் தில்தான் எம்.எல்.ஏ. பதவியும், மேலவை உறுப்பினர் பதவியும், அதன் பின் மேலவைத் துணைத் தலைவர் பதவியும், கடைசிக் காலத் தில் மேலவைத் தலைவர் பதவியும் மேலவை கலைக்கப்பட்ட நிலையில் தமிழ் உயர் மட்டக் குழுத் தலைவர் பதவியும் கிடைத்தன என்பது சரித்திர உண்மை.

திராவிட இயக்கத்தைப் பற்றி அவர் என்ன சொல்லியிருந்தாலும், கொச்சைப்படுத்தியிருந்தாலும், ம.பொ.சி. நம்பும் வைதிக மொழியில் சொல்ல வேண்டுமானால் கடைசிக் காலத்தில் அதற்கான பாவ மன் னிப்பையும், பிராயச் சித்தத்தையும் திராவிட இயக்கத்தினிடம்தான் பெற்றார்.

அண்ணா முதல் அமைச்சர் ஆன நிலையில் எப்படியாவது ஓர் அமைச்சராக வேண்டும் என்பதற்காக அவர் பட்ட பாடு நகைப்புக்குரியது.

அமைச்சரவையில் இடம் கொடுத்தால் தனது தமிழரசுக் கழகத்தையே கலைத்துவிடுவதாகச் சொன்ன கட்சிக்காரர் அவர்.

மந்திரி பதவிக்காக அவர் ஆலாய்ப் பறந்த நேரத்தில் விடுதலை யில் தந்தை பெரியார் மூன்று அறிக்கைகளை வெளியிட்டார்.

எந்தக் கட்சியானாலும் தமிழர் கள் எல்லாம் ஒன்று சேரவேண்டும் என்கிற சமயத்தில் பார்ப்பன அடிமைகளை, பார்ப்பனீயத் தொண் டர்களை தமிழர்களுக்கு மந்திரி யாக்கி, தமிழர்களின் மூக்கை அறுப் பதா? என்ற வினாவை எழுப்பினார் தந்தை பெரியார். இது எதற்காக? இன்று மந்திரி சபையில் ராஜாஜி அவர்களுக்கு ஒரு ஒற்றர் வேண்டும். தி.மு.க. மந்திரி சபையில் ராஜாஜியின் குரல் ஒலிக் கப்படுவதற்கும் அவரது உதடுகள் வேண்டுமா? என்றும் கேட்ட தந்தை பெரியார், வேலியில் போகிற சுக்குட் டியை காதில் விட்டுக் கொண்டு குடையது குடையுது என்கிற கதை (விடுதலை 24.8.1967) என்று தந்தை பெரியார் எழுதியதன் விளைவாக அந்தக் கால கட்டத்தில் அவருக்குக் கிடைக்கவிருந்த அமைச்சர் பதவி பறி போனது.

ஆனந்தவிகடன் ஏடு (3-_9_-1967) அப்பொழுது ஒரு கார்ட்டூன் போட்டது. நாற்காலியைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ம.பொ.சி. அவர்கள் அண்ணா, அண்ணா! தம்பி வந்திருக்கேன்! என்று கேலி செய்யப் பட்டதே --_ துக்ளக் பார்ப்பன ஏட்டுக்கு ஆனந்தவிகடன் பார்ப்பன ஏட்டின் கார்ட்டூன்தான் பொருத்தமானது.

அதே ம.பொ.சி. பின்னொரு கால கட்டத்தில் பார்ப்பனர் மீது பாய்ந்து விழுந்த நிலையும் உண்டு; தனக்கென்று வந்தால்தானே தெரியும் தலைவலியும், வயிற்றுவலியும்!

1971 ஆம் ஆண்டு தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளராக உதய சூரியன் சின்னத்தில் ம.பொ.சி. நின்றார். அவரை எதிர்த்து ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் திருமதி அனந்தநாயகி போட்டியிட்டார்.

பரமபக்தரான ம.பொ.சி. மயிலை கபாலீசுவரர் கோயிலுக்குச் சென்று தன் பெயரில் அர்ச்சனை செய்யுமாறு அர்ச்சகரை வேண்டினார்.

அந்த அர்ச்சகப் பார்ப்பான் என்ன செய்தான் தெரியுமா? ம.பொ.சி.யிடம் அர்ச்சனைக்கான துட்டை வாங்கிக் கொண்டு அவரை எதிர்த்து நின்ற அனந்தநாயகி அம்மையார் பெயருக்கே அர்ச்சனை செய்துவிட்டார். அந்த அளவு 1971 ஆம் ஆண்டு தேர்தல் பார்ப்பனர்-பார்ப்பனர் அல்லாதார் போராட் டமாக உச்ச நிலையில் விளங்கியது.

அன்று மயிலாப்பூர் தொகுதி 97 ஆவது வட்டத்தில் பேசியபோது ம.பொ.சி. தனக்கு ஏற்பட்ட இந்த அவமரியாதையைக் குறித்து ஆவேசமாக அவருக்கே உரித்தான தொனியில், மீசையை இடது கையால் ஒரு தடவி தடவி ஆக்ரோஷமாக கர்சித்தார்.

பார்ப்பனர்களின் ஓட்டு மட்டும் சிண்டிகேட்டுக்குப் போதுமா? மயிலாப்பூரில் ஒரு லட்சத்துப் பதினாயிரம் ஓட்டுகள் இருக்கின்றன. இதில் பிராமணர்கள் ஓட்டு 17 ஆயிரத்து அய்நூற்றுச் சொச்சம்; இந்த ஓட்டுகள் மட்டும் கிடைக்கும் என்று வைத்துக் கொண்டாலும், அனந்தநாயகி அம்மையார் வெற்றி பெறுவாரா? என்று மூச்சு முட்ட முழங்கினார்.

துக்ளக் பார்ப்பனக் கூட்டமும், திராவிட இயக்கத்தைக் கொச்சைப் படுத்தி பார்ப்பன அம்சமாக பேனா பிடித்த எழுத்தாளரும், ம.பொ.சி.யை துணைக்கழைத்து கடைசியில் தங்கள் உள்ளி மூக்குகளை உடைத் துக் கொண்டதுதானே மிச்சம்!

இந்தியாவில் அடிமைத் தளையை நீக்குவதற்காக விடுதலைப் போரை காங்கிரஸ் மகாசபை முனைப்புடன் நடத்தியபோது, தங்களது பிரித் தாளும் கொள்கையை ஆங்கிலே யர்கள் இந்தியாவிலும் செயல்படுத் தினார்கள். அந்த வகையில் சிக்கிய வர்கள்தான் நீதிக்கட்சிக்காரர்கள், உண்டாக்கப்பட்டதுதான் பார்ப் பனர் அல்லாதார் கட்சி என்ற அபாண்ட பழியைப் போடுகிறார் லட்சுமி நாராயணன்.

அப்படியா சங்கதி? அவர்கள் சாட்சிக்கழைத்த அந்த ம.பொ.சி யையே அவர்கள் ஆதாரம் காட்டிய ம.பொ.சி. அவர்களின் அந்த ஆதார நூலான, விடுதலைப் போரில் தமி ழகம் எனும் நூலையே சாட்சிக் கூண்டில் ஏற்றலாமா? இதோ, சிலம் புச் செல்வர் ம.பொ.சி. எழுதுகிறார்:

சென்னை மாகாணத்தைப் பொருத்தவரையிலே மிதவாதிகளைக் கொண்ட பழைய கட்சியாரில் வக்கீல்களே அதிகம். ஆண்டுதோறும் கூடும் காங்கிரஸ் மகா சபைகளிலே, வைஸ்ராயின் நிர்வாக சபைக்கும், சென்னை மாநில கவர்னரின் நிர்வாக சபைக்கும் இந்தியர்களை நியமிக்க வேண்டுமென்றும்; உயர்நீதிமன்ற நியமனங்களிலே இந்தியர்களைக் கூடுதலாக நியமிக்க வேண்டு மென்றும் கோரித் தீர்மானம் கொண்டு வந்ததே இந்த மிதவாதக் கூட்டம்தான். இத்தகைய பதவி களைத் தாங்கள் அடைய முடியு மென்ற நம்பிக்கையின் பேரிலேயே சென்னை மாகாண வக்கீல்கள் காங் கிரஸ் கூடாரத்துக்குள்ளேயே குடி யிருந்தனர். காங்கிரஸ் மகாசபையில் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்களே சேர முடியுமென்ற நிலை இருந்ததும், இந்த மிதவாதக் கூட்டம் அந்த மகாசபையிலே செல்வாக்குப் பெறு வதற்குச் சாதகமாக இருந்தது.

ஆங் கிலம் படித்தவர்களிலே பள்ளிகளி லும், கல்லூரிகளிலும் ஆசிரியர்களாக இருப்பவர்களும், அரசாங்க உயர் அலுவலர்களும் காங்கிரசில் ஈடுபட இயலாதவர்களாக இருந்தனர். ஈடுபட்டாலும், பிரிட்டீஷ் பொருள் களைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்ற அளவுக்குச் செயல்பட முடியாதவர் களாகவும் இருந்தனர். இதனால், ஆங்கிலம் படித்தவர்களிலே சுதந்திர மாக செயல்படுவதற்கு அதிக அள வில் சந்தர்ப்பம் பெற்றிருந்தது வக்கீல் கூட்டம்தான்.

பிற்காலத்தில் சென்னை மாகாணத்திலே ஜஸ்டிஸ் கட்சி தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது இந்த வக்கீல்களின் ஆதிக்கம்தான். இவர்களிலே மிகப் பெரும்பாலோர் பிராமணர்களாக இருந்தாலும் அரசாங்க நீதித்துறை, நிர்வாகத்துறை, பார்லிமெண்டரித் துறை ஆகியவற்றில் எல்லாம் இந்த பிராமண வக்கீல்களே நியமனம் பெற்றதாலும், இவர்களுடைய ஆதிக்கத்துக்கு வகுப்புவாத வண்ணம் பூச ஜஸ்டிஸ் கட்சியால் முடிந்தது. அந்நாளில் சட்டம் படித்த வக்கீல்களில் நூற்றுக்குத் தொண் ணூறு பேருக்கு அதிகமானோர் பிராமணர்களாகவே இருந்தனர். ஆகவே, அவர்கள் இந்தியன் என்ற பெயரால் அரசாங்கத் துறைகள் அனைத்திலும் நியமனம் பெறுவது இயற்கையாக இருந்தது என்று எழுதியுள்ளாரே.

(விடுதலைப் போரில் தமிழகம்- _ ம.பொ.சி. பக்கம் 173_-174)

ம.பொ.சி.யை துணைக்கழைத்தார் திருவாளர் கே.சி. லட்சுமிநாராயண; அந்த ம.பொ.சி.யே காங்கிரஸ் என்பது பார்ப்பனர்கள் பதவி தேடும் கூடாரம் ஆனதால், ஜஸ்டிஸ் கட்சி தோன்ற வேண்டிய அவசியம் ஏற் பட்டது என்று ஜஸ்டிஸ் கட்சியின் தோற்றத்திற்கு நியாயம் கற்பித்து விட்டாரே - துக்ளக் கூட்டம் எங்கே போய் முட்டிக் கொள்ளப் போகிறது?
அத்துடன் விட்டாரா ம.பொ.சி?.

இவர்கள் மயிலாப்பூர் வக்கீல்கள் என்றும் எழும்பூர் வக்கீல்கள் என்றும் இருவேறு பிரிவுகளாகப் பிரிந்து செயல் பட்டனர். முன்னவர் அனேகமாக பிராமணர்களாகவும், பின்னவர் அனேகமாக பிராமணரல் லதாராகவும் இருந்தனர். மயிலாப்பூர் வக்கீல்களுக்கு திரு.வி.கிருஷ்ணசாமி அய்யர் தலைவர் என்றால், எழும்பூர் வக்கீல்களுக்கு சர்சி.சங்கரன் நாயர் தலைவராக இருந்தார். டி.எம்.நாயரும் எழும்பூர் கூட்டத்தாருடன் சேர்ந் திருந்தார். (நூல் பக்கம் 222)

*****

காங்கிரசைப் பயன்படுத்தி சகலமும் பார்ப்பனர் மயம்; பதவிகள் எல்லாம் அவர்கள் மயம் என்றிருந்த நிலையில், பார்ப்பனர் அல்லாதார் களின் உரிமைக்காகக் குரல் கொடுக்க ஜஸ்டிஸ் கட்சி முன்வந்ததில் என்ன குற்றம்?

பார்ப்பனர்கள் திட்டமிட்டு பதவிகளை அபகரித்தால் அது தேச சேவை; நாட்டுப் பற்று - சுதந்திர தாகம்; - பார்ப்பனர் அல்லாதார் தங்கள் உரிமைக்காகக் குரல் கொடுத்தால் , பாடுபட்டால் அதற்கு உள் நோக்கமா? தேசத் துரோகமா?

பார்ப்பனர்கள் எந்தெந்தப் பதவிகளை எல்லாம் எப்படி எப்படி பெற்றார்கள் என்பதை - தங்களுக்குத் துணைக்கு அழைத்த ம.பொ.சி.யே வேறு வழியின்றிப் பட்டியல் போட்டுக் கொடுத்திருக்கிறாரே!

கொலைக் குற்றவாளியான ஜகத்குரு ஜெயேந்திர சரஸ்வதி வழக்கில் ஏற்பட்ட பிறழ் சாட்சியாக ம.பொ.சியை கருதுவார்களோ?

மும்பையில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாடு பற்றி க.சுப்பிரமணிய அய்யர் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார் (1888). அந்நூலின் பெயர் ஆரியஜன அய்க்கியம் அல்லது காங்கிரஸ் ஜன சபை என்பதே.

இப்படி காங்கிரஸ் என்றாலே ஆரிய ஜனத்திற்கானதே என்று ஆகி விட்ட பிறகு ஆரியரல்லாதாருக் கென்று ஒரு அமைப்பு வேண்டாமா? அதுதான் ஜஸ்டிஸ் கட்சி - காலத்தின் கட்டாயமாகத் தோன்றியது.

எல்லாம் எங்களுக்கே யென்று தங்கள் வயிற்றில் அறுத்துக் கட்டிக் கொண்ட கும்பல் அதற்கெதிரான பூகம்பம் புறப்படும்போது லாலி பாடியா வரவேற்பர்? அந்த ஆத்திரத்தை நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் லட்சுமி நாராயணர்கள் உருவில் உறுமிக் காட்டுகிறார்கள்.
ஏதோ தென்னிந்திய நல உரிமைச் சங்கமான ஜஸ்டிஸ் கட்சிதான் பார்ப்பன எதிர்ப்பைத் தூக்கிப் பிடித்தது என்று கருதவேண்டாம்.

சென்னை மாகாணத்தில் காங்கிரசுக்குள்ளேயே பார்ப்பனர் அல்லாதாருக்கு அமைப்பு ஒன்றைத் தொடங்கும் நிலைக்குத் துரத்தப்பட் டதே! அதன் பெயர் சென்னை மாகாண சங்கம், தலைவர் கேசவப் பிள்ளை. துணைத் தலைவர்களில் ஒருவர் ஈ.வெ.ரா. பார்ப்பனர் அல்லா தாருக்கு அனைத்துத் துறைகளிலும் 50 விழுக்காடு தருவது என்ற தீர் மானம் செய்யப்பட்டது. இவ்வமைப் பில் இடம் பெற்றவர்கள் அனை வரும் பார்ப்பனர் அல்லாதாரே! இதனைக் கண்டு வெகுண்ட சத்திய மூர்த்தி அய்யர் மாதவராவ் போன்ற பார்ப்பனர்கள் தேசிய வாதிகள் சங்கம் என்று காங்கிரசுக்குள்ளேயே இன்னொரு அமைப்பினை ஏற் படுத்தினர்.

விஜயராகவாச்சாரியார் தலைவ ராகத் தேர்வு செய்யப்பட்டார். கஸ்தூரி ரெங்க அய்யங்காரைத் துணைத் தலைவர் என்று ராஜாஜி முன்மொழிந்தார். ஈ.வெ.ரா. திரு.வி.க., டாக்டர் வரதராஜுலு நாயுடு ஆகியோர் வ.உ.சியைத் துணைத் தலைவராகக் கொண்டு வர வேண்டும் என்று வற்புறுத்தினர். கடைசியாக வ.உ.சி.யோடு கஸ்தூரி ரெங்க அய்யங்காரும் துணைத் தலைவர் களாக ஆக்கப்பட்டனர்.

பார்ப்பனர் அல்லாதாருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு அனைத் துத் துறைகளிலும் அளிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை தேசியவாதிகள் சங்கத்திலும் நிறைவேற்றுமாறு ஈ.வெ.ரா. உள்ளிட்ட மூன்று தலை வர்களும் செய்துவிட்டனர். அதனைக் கண்ட ராஜாஜி அவர்கள் உங்களை விட தியாகராயச் செட்டி யாரே மேல் என்று கூறும் நிலை ஏற்பட்டதே!

பார்ப்பனர் அல்லாதாரின் உரி மைக்காக ஒரு அமைப்புத் தோன்று வதற்கு இவ்வளவு அழுத்தமான வரலாற்றுப் பின்னணிகள் இருக்க, இவற்றை எல்லாம் தார் கொண்டு அழித்துவிட்டு, பார்ப்பனர் அல் லாதார் இயக்கத்தைத் தேச துரோக அமைப்பு என்று பழி சுமத்துகின் றனர் பார்ப்பனர்கள் என்றால் அவர் களை ஆபேடூபே சொன்ன அந்த அடை மொழிகளால் தான் அர்ச் சனை செய்ய வேண்டும்.

Avarice, Ambition, Cunning, Wily, Doube tongued, Servile, Insinuating, Injustice, Fraud, Dishonest, Oppression intrigue..

இதனை அறிஞர் அண்ணா பின்வருமாறு மொழி பெயர்க்கிறார்:

பேராசைப் பெருந்தகையே போற்றி!
பேசநா இரண்டுடையாய்ப் போற்றி!
தந்திர மூர்த்தி போற்றி!
தாசர்தம் தலைவா போற்றி!
வஞ்சக வேந்தே போற்றி!
வன்கணநாதா போற்றி!
கொடுமைக் குணாளா போற்றி!
கோழையே, போற்றி, போற்றி!
பயங்கொள்ளிப் பரமா போற்றி!
படு மோசம் புரிவாய் போற்றி!
சிண்டு முடிந்திடுவாய் போற்றி!
சிரித்திடு நரியே போற்றி!
ஓட்டு வித்தை கற்றோய் போற்றி!
உயர் அநீதி உணர்வோய் போற்றி!
எம் இனம் கெடுத்தோய் போற்றி!
ஈடில்லாக் கேடே போற்றி!
இறை, இதோ, போற்றி! போற்றி!
ஏத்தினேன் போற்றி! போற்றி!
இதுதான் அண்ணாவின் படப்பிடிப்பு!
குறிப்பு: இறந்து போன வரை பார்ப் பனர்கள் சாட்சிக்கு அழைத்ததால் ம.பொ.சி. யைப் பற்றி நாமும் எழுத நேரிட்டு விட்டது!

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (3) வெள்ளைக்காரர்களை அண்டிப் பிழைத்த கூட்டம் எது?

இந்தியாவின் சுதந்திரத்துக்காக காங்கிரஸ் பாடு பட்டதாகவும், ஆனால் அதற்கு மாறாக ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கட்டளைப்படி நீதிக்கட்சி தொடங்கப் பட்டது என்றும் அவதூறு செய்கிறார் துக்ளக் கில் திரு.கே.சி. லட்சுமி நாராயணன்.

இதற்கு நாம் பதில் சொல்லத் தேவையில்லை. எதற்கெடுத்தாலும் ம.பொ.சி.யைத்தானே சாட்சிக்கு அழைக்கிறார்கள்? அவர் எழுதிய விடுதலைப் போரில் தமிழகம் என்ற நூலைத்தானே என்ற சாட்சிக்குக் கூப்பிடுகின்றனர்?

அந்த ம.பொ.சி.யே அந்த நூலிலே என்ன எழுதுகிறார்? அவர்கள் கொண்டு வந்த ஆயுதத்தைப் பறிமுதல் செய்து, அவர்களைத் தாக்குவது தானே சுவாரசியமானது.

காங்கிரசைத் தோற்றுவித்தவனே ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் என்ற வெள்ளைக்காரன்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.

முதல் மாநாடு 1885 டிசம்பர் 28,29, 30 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை யின் முதல் மாநாட்டை ஹ்யூம் கூட்டினார். அதற்காக விடுத்த சுற்றறிக்கையில், வங்காளம், பம்பாய், சென்னை ஆகிய மாநிலங்களிலிருந்து ஆங்கில மொழியில் ஞானமுள்ள அரசியல் பிரமுகர்களைக் கொண்ட தாக மாநாடு இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆம், இந்திய தேசியத்தின் பெயரால் முதன் முதலாக ஒரு மாநாடு, இங்கிலீஷ்காரர் ஒருவரால், இங்கிலீஷ் படித்துப் பட்டம் பெற்ற வர்களைக் கொண்டதாகக் கூட்டப் பெற்றது. பம்பாய் கோகுல்தாஸ் தேஜ்பால் சமஸ்கிருதக் கல்லூரியில் மாநாடு நடந்தது என்று ம.பொ.சி. அதே நூலில் குறிப்பிட்டுள்ளாரே -இதற்கு என்ன பதில்?

வெள்ளைக்காரன் ஹ்யூமால் தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு ஓராண்டல்ல, ஈராண்டல்ல, 22 ஆண்டுகள் அகில இந்தியப் பொதுச் செயலாளராக இருந்திருக்கிறார் அவர். அடுத்தடுத்து வெள்ளையர்கள் தலைமை வகித்தும் மகாசபை கூடிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ராஜவாழ்த்துப் பாடப்பட்டதும், பிரிட்டீஷ் அரசுக்கு விசுவாசம் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் ஹ்யூம் காலத்தில்தான்.

சுருக்கமாகச் சொன்னால் எவ்வித எதிர்ப்புமின்றி படித்த இந்தியர்களுக்கு உயர் உத்தியோகங்களும் சலுகைகளும் தேடித் தரும் ஸ்தாபனமாகக் காங்கிரஸ் செயல்பட்டது ஹ்யூம் சகாப்தத்திலேயே! இது ஒன்றும் அவர்களுக்குக் குறைபாடோ, குற்றமோ அல்ல. காங்கிரசை அவர் தோற்றுவித்ததே இந்தக் காரியங்களுக்குத்தான். இவை எல்லாம் நமது சரக்கல்ல; அதே ம.பொ.சி. - அதே நூலில் காணக்கிடப்பவைதான்.

வெள்ளைக்காரனால் தொடங்கப்பட்டது
பதவிகளைப் பெறுவதற்காகத் தொடங்கப்பட்டது
அந்தப் பதவிகள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்களுக்கே! என் பதை இந்நூலில் ம.பொ.சி. வெளிப்படையாகவே கூறுகிறார்.

இந்த யோக்கியதையில் உள்ள பார்ப்பனர்கள் நீதிக் கட்சி வெள்ளைக்காரர்கள் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தது - பதவிகளைத் தேடி அலைந்தது என்று சொல்லுகிறார்கள் என்றால் அவர்களின் யோக்கியதையை எடை போட்டுப் பார்க்க வேண்டும்.

மேலும் ம.பொ.சி. எழுதுகிறார் கேளுங்கள், கேளுங்கள்.

சென்னையில் கூடிய காங்கிரஸ் மகா சபையிலே பிரிட்டிஷ் அரசுக்கு வாழ்த்து பாடப்பட்டது. வெள்ளையரான சென்னை கவர்னர் கன்னிமரா விட மிருந்து வாழ்த்துச் செய்தியைப் பெற்று , அதை மிகுந்த பக்தி விசுவாசத்துடன் படித்த பிறகே நடவடிக்கை தொடங் கப்பட்டது. பிரிட்டிஷ் அரசியார், இந்தியாவின் சக்கரவர்த்தினியுமாகிய விக்டோரியாவுக்கு, அவர் அய்ம்பதாண்டு காலம் வெற்றிகரமாக பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை நடத்தியதற்காகப் பாராட்டு தெரிவித்து, அவரது ஆட்சி மேலும் நீடிக்க வேண்டும் எனவும் பிரார்த் தித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பெற்று, பேசியவர்கள் எல்லோரும் பிரிட்டிஷ் ஆட்சியைப் புகழ்ந்தனர்.

(ம.பொ.சி. அதே நூல் பக்கம் 133,134)

வெள்ளையர்களுக்கு சாதாரண விசு வாசத்தோடு அல்ல; பக்தி விசவாசத்தோடு பிரார்த்தித்து வாழ்த்துப் பாடியதாக ம.பொ.சி. எழுதி இருக்கிறாரே. இதற்கு என்ன பதில் லட்சுமி நாராயணரே?

திருவாளர் கே.வி. லட்சுமி நாராயணன் துணைக் கழைத்த ம.பொ.சி.தான் பிறழ் சாட்சியாகிவிட்டார். அவாளின் சுதேசமித்திரனாவது அவாளுக்குத் துணை போகிறாதா என்று பார்க்கலாம்.

காங்கிரஸ் தோற்றமே
பிரிட்டிஷாருக்கு பல்லக்கு தூக்கவே

இதோ ஆதாரம்: 1855 ம் வருடம் டிசம் பர் 28 ஆம் தேதி பகல் 12 மணிக்கு காங் கிரஸ் மாநாடு துவங்கப்பட்டது.

வங்கத்துக் கீர்த்தி மிகுந்த பாரிஸ்டர் உமேசசந்திர பானர்ஜி அந்த சபையிலே அக்கிராசனம் வகிக்க வேண்டும் என்று ஏ.ஓ. ஹியூம் பிரேரணை செய்ய, அதை காசிநாத தெலங்கரும் நீதிபதி மணி அய்யரும் ஆமோதித்தனர்.

நம்மை பிரிட்டிஷ் ராஜ்யத்துக்கு விரோ தமாகச் சூழ்ச்சிகள் செய்யும் ராஜ விரோதிகளின் கூட்டம் என்று சில கனவான்கள் ஞானக் குறைவினால் சொல்லி விட்டார்கள். பிரிட்டன் அரசு நமக்கு அனுகூலமாக எவ் வளவோ காரியங்களைச் செய்தி ருக்கிறது. அதன் பொருட்டு அதற்கு நாம் நன்றி செலுத்துவோம். அய்ரோப்பாவில் உள்ள ஜனங்கள் ஆட்சி முறையைப்பற்றி எவ்வித மான கொள்கைகள் உடையாரோ அதே விதமான கொள்கைப்படி இங்கும் ஆட்சி நடத்த விரும்பு கிறோம். இந்த விருப்பத்துக்கும் பிரிட்டிஷ் ராஜாங்கத்தினிடமுள்ள பூர்ண விசுவாசத்திற்கும் விரோதமே யில்லை.

(1835_ம் ஆண்டு டிசம்பர் 28 ம் தேதி நடைபெற்ற முதலாவது காங்கிரஸ் மாநாட்டில் உமேசசந்திர பானர்ஜி தலைமை வகித்துப் பேசியது.)

இங்கிலீஷ் ராஜ்யத்திடம் நாம் பூர்ணமான அன்பும் ஆதரவும் கொண்டிருக்கிறோம். அவர்கள் நமக்குச் செய்த நன்றிகளை எல்லாம் மறக்கமாட்டோம். அவர்கள் நமக்குக் கொடுத்த கல்வியினால் புதிய ஒளி பெற்றோம். ஆசியாவின் கொடுங் கோன்மையாகிய இருளுக்கிடையே ஆங்கிலேய நாகரீகத்தின் விடுதலை ஒளி நமக்குக் கிடைத்தது (கரகோஷம்)

- 1906 ம் வருடத்தில் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில் தாதாபாய் நவ்ரோஜி தலைமை வகித்துப் பேசியது.

மகாராணியின் அனுகூலமான, என்றும் மறப்பரிய கீர்த்தி மிக்க ஆட்சியில் அய்ம்பது வருஷம் முடிவு பெற்றதைக் குறித்து சக்ரவர்த்தினி யிடம் கடமைப்படி உண்மையான மகிழ்ச்சிகளைத் தெரிவிப்பதுடன் பாரத தேசத்தின் எல்லாப் பகுதிகளினின்றும் பிரதிநிதிகள் வந்து கூடிய இந்த ஜனசபை பிரிட்டிஷ் ராஜ்யத்தின் மீது அம்மகாராணி இன்னும் பல வருடம் ஆளவேண்டும் என்று வாழ்த்துகிறது.

- 1906 ம் வருடம் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம்.

இந்த ஜனசபையை ஏற்படுத்தினோர் பிரிட்டிஷ் ராஜ்யத்திடம் மிகுந்த பற்றுதலுடையவர்கள். இதை விட்டு ருஷ்யாவினுடைய ஆட்சியின் கீழ்ப் புகுவதை அவர்கள் ஒரு நாளும் விரும்பமாட்டார்கள். இங்கி லீஷ் ராஜ்யம் நாகரீகமானது; ருஷ்ய ஆட்சியோ கொடுங் கோன்மை.

- 1889 டிசம்பர் 26 இல் பம்பாயில் நடைபெற்ற 5ஆவது காங்கிரஸ் மகா சபையில், வில்லியம் வெட்டர்பர்ன் என்ற ஆங்கிலேயர் தலைமை வகித்துப் பேசியது.

கருணை தங்கிய சக்கரவர்த்தினி யின் ஆட்சி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத் தின் சரித்திரத்தில் நீண்டதும், மிக உபகாரமானதும், மனித சந்தோஷத் தாலும், நாகரீகத்தாலும் மிக முக் கியமான அபிவிருத்திகளுடன் பிணைக்கப்பட்டது மாதலால், இந்த ஆட்சியில் அறுபதாண்டு முடிவு பெற்றமை கருதி அவருக்கு இந்த ஜன சபை வணக்கத்துடன் நன்றி தெரிவிக்கிறது.

- 1896ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி நடைபெற்ற 12 வது காங்கிரஸ் மகாசபையில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம். சுதேசமித்திரன் வெளியிட்ட காங்கிரஸ் வரலாறு முதல் பாகத்திலிருந்து.

இதற்குப் பதவுரை, பொழிப்புரை தேவைப்படாதே! வெள்ளைக்காரர் களிடம் வேலைகள் பெறுவதற்காக மனு போட்டு அவர்களுக்கு ராஜ வாழ்த்துப்பாடி மண்டியிட்டுக் கிடந்த பரம்பரையா பெரியார் இயக்கம் பற்றிப் புழுதி வாரித் தூற்றுவது?

பெரியார் ஈரோட்டில் நடத்திய (10-5-1930) இளைஞர் மாநாட்டின் தீர்மானம் என்ன தெரியுமா?

எந்தப் பொதுக் கூட்டங்களிலும் ஆரம்பத்திலாவது, முடிவிலாவது ராஜவணக்கம், கடவுள் வணக்கம், தலைவர்கள் வணக்கம் ஆகியவைகள் செய்யும் காரியத்தை விட்டுவிட வேண்டும் என்று இம்மாநாடு தீர் மானிக்கிறது.

இந்த வரலாற்றையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் வெத்து வேட்டு வாணங்களை விட்டு வேடிக்கை காட்ட ஆசைப்பட வேண்டாம் அக்ரஹாரமே என்று எச்சரிக்கை செய்ய விரும்புகிறோம்.

சுதந்திரம் கேட்கவா காங்கிரஸ் தொடங்கப்பட்டது?

At that time was the foundation of the Indian National Congress laid not for Swaraj, nor Swadesh, no Swadhinta or Swadharma but for few crumbs that may fall from the table of the British - whose power in India had been established on firm foundation.

அந்த நேரத்தில் அகில இந்திய காங்கிரஸ் சுயராஜ்யத்திற்காகவோ, சுதேசிக்காகவோ, சுவாதீனத்திற்கா கவோ, சுயதர்மத்துக்காகவோ அமை யப் பட்டதல்ல. ஆனால் பிரிட்டி ஷார் மேஜையிலிருந்து விழுகிற எலும்புத் துண்டுகளுக்காகவும், அவர்களு(From sixty Years of Congress by Sajyapal and Praboth Chandra M.A.) போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?

1885-இல் வெள்ளைக்காரரால் தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் பூர்ண சுதந்திரம் கேட்டது 1929 லாகூர் மாநாட்டில்தானே!

1916 இல் நீதிக்கட்சி தோற்றுவிக் கப்பட்டது. அதன் முதல் குறிக்கோள் பார்ப்பன ஆதிக்கப் பிடியிலிருந்து பார்ப்பனர் அல்லாதார் விடுதலை பெறுவதே அதுவும் காங்கிரஸ்காரராக இருந்த பிட்டி தியாகராயர் டாக்டர் டி.எம். நாயர் ஆகியோர் டாக்டர் சி. நடே சனார் துணையோடு நீதிக் கட்சியை நிறுவினார்கள். 1925இல் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் இருந்து வெளியேறிய தந்தை பெரியர் 1932 டிசம்பரில் வெளியிட்ட சுயமரியாதை இயக்கத் தின் அடிப்படை இலட்சியங்களும், சுயமரியாதை இயக்க சமதர்மக் கட்சியாரின் வேலைத் திட்டமும் என்பதில் முதல் திட்டமாகக் குறிப் பிடப்பட்டுள்ளது என்ன தெரியுமா?

பிரிட்டிஷ் முதலிய எவ்வித முதலாளித் தன்மை கொண்ட ஆட்சியிலிருந்து இந்தியாவைப் பூரண விடுதலை அடையச் செய்வது என்று திட்டம் கொடுத்தவர் அல்லவா ஈரோட்டுச் சிங்கம்.

1942 ஆம் ஆம் ஆண்டு ஆகஸ்டு 8ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு (Quit India) தீர்மானத்தை நிறைவேற்றியது காங்கிரஸ்.

(பார்ப்பனர்களின் குலதர்ம வீரரான சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் எதிர்த்தார் - பின் வாங்கி னார். ஆகஸ்டு துரோகி என்று தூற் றப்பட்டார் என்பதையும் துக்ளக் கூட்டத்துக்கு இந்த இடத்தில் நினைவூட்டுகிறோம்.)

அதனைத் தொடர்ந்து தலைவர் கள் கைது செய்யப்பட்டனர். பிரிட்டிஷ் அரசு அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டது. எங்கும் கலவரம், கொலை, கொள்ளை, தீ வைப்பு இத்தியாதி, இத்தியாதி!

காந்தியார் கைது செய்யப்பட்டார். பின் விடுதலையானார். வெளி வந்த வேகத்தில் அவசரம் அவசரமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

சட்டமறுப்பு ஆரம்பிக்கும் நோக் கம் எனக்கில்லை. முன் நிகழ்ந்தது இனி நிகழாது. 1942 ஆம் வருடத்து நிலைமைக்கு இனிமேல் இட்டுச் செல்லமாட்டேன். சிவில் நிர்வாகத் தில் உள்ள தேசிய சர்க்கார் போதும். (சுதேசமித்திரன் 14_-7_-1944) என்று கூறிடவில்லையா?

அதே நேரத்தில் தந்தை பெரியார் அவர்களை ஒரு கணம் எண்ணிப் பார்க்கட்டும்.

இந்த ஆட்சி ஏன் ஒழிய வேண் டும்? என்று குடி அரசில் (29-12-1933) தலையங்கம் எழுதியதற்காக. வெள்ளைக்கார பிரிட்டிஷ் அரசாங்கம் 124 ஆ. அரசு வெறுப்புக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு (30-_12_1933) சிறையில் அடைக்கப் பட்டாரே.

எதிர் வழக்குக் கூட ஆடாமல் வரலாற்று சிறப்பு மிக்க அறிக்கையினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தவர் அல்லவா பெரியார்? 9 மாத சிறைத் தண்டனை 300 ரூபாய் அபராதம். அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஒரு மாதம் தண்டனை என்று பிரிட்டிஷ் நீதிமன்றம் தண்டனை அளித்ததே - சிரித்த முகத்துடன் தண்டனைகளை ஏற்றுச் சிறை சென்றவர் அல்லவா வெண்தாடி வேந்தர்? தந்தை பெரி யாரின் தங்கை எஸ்.ஆர்.கண்ணம் மாளும் தண்டனைக்குள்ளானாரே?

ஆச்சாரியார் போல அண்டர் கிரவுண்ட் ஆனாரா? அப்படி அண் டர் கிரவுண்ட் ஆனவருக்குத்தானே இந்தியாவின் முதல் கவர்னர் ஜென ரல் என்ற லாட்டரி பரிசு அடித்தது _ பார்ப்பனர் சூழ்ச்சியாலும், ஆதிக்கத்தாலும்

துக்ளக் கூட்டமே! கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம்!

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (4) ஆரம்ப அணுகுண்டு அதுதான்!

எல்லாவற்றிலும் பார்ப்பனமயம் என்ற கொடி ஆணவத்தோடு பறந்து கொண்டிருந்தது. நூற்றுக்குத் தொண்ணூற்றேழு சதவிகிதமான பார்ப்பனர் அல்லாத மக்கள் - மண்ணுக்குரிய மக்கள் கை பிசைந்து நின்றனர். எடுத்துக்காட்டாக ஒரு புள்ளி விவரம் (1912) நூற்றுக்கு மூன்று பேர்களாக இருந்த பார்ப் பனர்கள் டிப்டி கலெக்டர்களில் 55% சப் ஜட்ஜ்களில் 83%

மாவட்ட முன்சீப்புகளில் 72% என்ற நிலை.

அதே ஆண்டில் சென்னை மாநில சட்ட மன்றத்தில் இடம் பெற்றிருந்த வர்கள் யார் யார் தெரியுமா?

உள்ளாட்சித் துறைகளிலிருந்து வந்தவர்கள்

(1) தென் ஆர்க்காடு - செங்கற் பட்டுத் தொகுதி - வழக்கறிஞர் ஆர். சீனிவாச அய்யங்கார்.

(2) தஞ்சாவூர் _ திருச்சிராப்பள்ளி தொகுதி _ வி.கே. இராமானுஜ ஆச்சாரியார்

(3) மதுரை இராமநாதபுரம் தொகுதி _ கே. இராமையங்கார்.

(4) கோவை _ நீலகிரி தொகுதி _ சி. வெங்கட்ரமண அய்யங்கார்.

(5) சேலம் _ வடாற்காடு தொகுதி _ பி.வி. நரசிம்மய்யர்

(6) சென்னை நகரம் _ சி.பி. இராமசாமி அய்யர்

டில்லி மத்திய சட்டசபையில் இடம் பெற்றவர்கள் செங்கற்பட்டு மாவட்டம் எம்.கே.ஆச்சாரியார்! சென்னை: திவான் பகதூர் டி. ரங்காச்சாரி.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். சுப்பிரமணிய அய்யர்! வி. கிருஷ்ண சாமி அய்யர், டி.வி. சேஷகிரி அய்யர், பி.ஆர். சுந்தரம் அய்யர்.

இத்தகு இறுக்கமான பார்ப்பன ஆதிபத்திய சூழலில்தான் நீதிக்கட்சி உதயமாயிற்று என்பதை மறக்கக் கூடாது.

துக்ளக் பார்ப்பன வகையறாக் களுக்கு மூக்கின்மேல் புடைத்துக் கொண்டு வருகிற ஆத்திரம் - இவ்வளவுப் பெரிய அக்கிரகார ஆதிக்கக் கோட்டையை உடைத்து விட்டார்களே இந்தப் ஜஸ்டீஸ் கட்சிப் பாவிகள் என்பதுதான்!

அந்தக் காலத்தில் கல்லூரிகள் சென்னை போன்ற இடங்களில்தான். வெளியூர்களிலிருந்து சென்னைக்குப் படிக்கவரும் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க விடுதி கள் கிடையாது. இருந்த விடுதிகள் எல்லாம் பார்ப்பனர்களுடையது. பார்ப்பனர் அல்லாதாருக்கு அங்கு இடம் கிடையாது. வேண்டுமானால் எடுப்புச் சாப்பாடு எடுத்துக் கொண்டு வரலாம். அங்கு தங்கி உணவருந்த முடியாது என்ற கொடுமை.

அந்தக் கால கட்டத்தில் பார்ப் பனர் அல்லாதார் தங்கிப் படிக்க சென்னையில் விடுதி ஒன்றை ஒருவர் (டாக்டர் சி. நடேசனார்) ஏற்படுத் தினார் என்றால் அது என்ன சாதார ணமானதுதானா? பாலைவனத்தில் கிடைக்கப் பெற்ற சோலையல்லவா!

பார்ப்பனர் அல்லாதார் அரசியல் உள்பட எல்லா நிலைகளிலும் உரிய இடம் பெற்றாக வேண்டும் என்று கருதியது காலத்தின் கட்டாயம் தானே!

நீதிக்கட்சி தோன்றியதும், செயல் பட்டதும் இந்த அடிப்படையில்தான்!

நீதிக்கட்சி தோன்றி 95 ஆண்டு களுக்குப் பிறகும்கூட வரலாற்றின் நேர்மையான மய்ய ஓட்டத்தைப் புறந்தள்ள, கொச்சைப்படுத்த ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது என்றால் அதனைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்யும்வரை நாம் ஓய்ந்து விட முடியுமா?

வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயர் அவர்களால் 1916 டிசம்பர் 16ஆம் நாள் வெளியிடப் பட்ட பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கையில் அங்கொன் றும் இங்கொன்றுமாக வார்த்தை களைப் பிடுங்கி தம் வசதிக்கு ஏற்ப சேற்றைவாரி இறைக்கிறார் திருவா ளர் லட்சுமி நாராயண அய்யர்.

பார்ப்பனர்களின் உத்தியோக ஆதிக்க நிலை, கல்விநிலை, சமுதாய நிலை, பார்ப்பனர் அல்லாதார் பெற வேண்டிய சுயமரியாதை உணர்வை எல்லாம் விவரித்துள்ளார் அவ்வறிக் கையில். பார்ப்பனர் அல்லாதாருக்கு ஓரியக்கம் தேவைப்படுவதன் அவசி யத்தையும் தெரிவித்துள்ளார்.

சமுதாயத்தில் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற வேற்றுமைகள் மறையத் தொடங்கினால் மட்டுமே சுயாட்சி பெறுவதற்கான தகுதியை நாம் பெற்றவர் ஆவோம் என்ப தையும் பதிவு செய்துள்ளார்.

இறுதியாக அந்த அறிக்கையில் பின்வருமாறு முடித்துள்ளார்.

எங்களுடைய உறுதியான நம்பிக்கை என்னவென்றால், இன்னும் சிறிது காலத்திற்காவது ஒவ்வொரு வகுப்பாரும் தங்களுடைய வளர்ச் சியை முதன்மையாகக் கருத வேண் டும். பிற வகுப்பினர்களுடன் சேர்ந்து பணியாற்றும் பொழுது தான் தாழ்ந் தவன் என்று கருதாது சுயமரியாதை யுடன் சம உரிமை பெற்றவன் என்று எண்ண வேண்டும். சுயமரியாதை யுடன் சம நிலையிலிருந்து மற்றவர் களுடன் பணியாற்றுவதையே ஒவ் வொருவரும் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்? என்று கூறி அறிக்கையினை நிறைவு செய் துள்ளார்.
இத்தகைய சமத்துவமும், சகோ தரத்துவமும், சமூகநீதியும் பொங்கி மணம் வீசும் ஓர் அறிக்கையைப் பார்ப்பனீயத்துக்கே உரித்தான குறுக்குப் புத்தியுடன் - குதறுவது - அவர்களுக்கே உரித்தான கோணல் புத்தியைத்தான். நிர்வாணமாக வெளிப்படுத்தும் பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக் கையைப் படித்து அந்தக் கால கட்டத்திலேயே இந்து ஏட்டுக்கு உதறல் எடுத்ததுண்டு. It is With Much Pain and Surprise that we persued the document என்று எழுதியதே! மிகுந்த வலியுடனும், திகைப்புடனும் அந்த அறிக்கையைக் கவனித்ததாம்! இருக் காதா? அதுதானே அவாள் ஆதிக்கத் துக்கான ஆரம்ப அணுகுண்டு. இன்றுவரை அந்த உதறலைக் காண முடிகிறதே!

முதல் உலகப் போருக்குப் பிறகு இந்தியர்களுக்கும் ஆட்சி அமைப்பு முறையில் போதிய இடம் அளிப்பது என்ற முடிவினை பிரிட்டிஷ் அரசு சிறப்புக் கெசட்டில் வெளியிட்டது.

இதன்மீது மக்கள் கருத்து அறிய மாண்டேகு - செம்ஸ்போர்டு ஆகிய இருவர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவிடம் நீதிக்கட்சித் தலைவர் பிட்டி தியாகராயர், டாக்டர் நாயர் உள்ளிட்டோர் அறிக்கை ஒன்றினை அளித்தனர். வகுப்புவாரிப் பிரதிநிதித் துவம் அளிக்கப்பட்டாலொழிய பார்ப்பனர் அல்லாதார் கடைத்தேறு வது கடினம் என்பதை உறுதியாகத் தெரிவித்திருந்தனர்.

இந்திய மக்களின் கருத்துகளைத் தொகுத்துக் கொண்டு குழுவினர் லண்டன் சென்றனர்.

இதுகுறித்து நேரில் சாட்சியம் அளிக்க இந்தியத் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். பார்ப்பனர் அல்லாதார் அமைப்பின் சார்பில் டாக்டர் டி.எம். நாயர் லண்டன் சென்றார்.

மாண்டேகு - செம்ஸ்போர்டு அறிக்கை 1918 ஜூலை 2இல் லண்டனில் வெளியிடப்பட்டது. அதில் முசுலிம்களுக்கும், சீக்கியருக் கும் மட்டுமே பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் அமைந்திருந்தது. பார்ப்பனர் அல்லாதாருக்கும் தாழ்த் தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக் கும் பிரதிநிதித்துவம் அளிக்கப் படவில்லை.

டாக்டர் நாயர் அப்பொழுது லண்டனில்தான் இருந்தார். இதுகுறித்து கருத்துத் தெரிவிக்க அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் அவர் முயற்சியைக் கைவிடவில்லை. நண்பர்கள் மூல மாகவும், ஏற்கெனவே இந்தியாவில் பணியாற்றியிருந்த ஆங்கிலேய அதிகாரிகள் மூலமும் கடுமையாக முயற்சித்தார். அதன் விளைவு - பிரபுக்கள் சபையில் நாயருக்கு ஆதரவாக வாதிட்டனர். முயற்சிக்கு வெற்றி கிட்டியது. பிரபுக்கள் சபை, காமன் சபை உறுப்பினர்கள் அடங் கிய கூட்டத்தில் டாக்டர் டி.எம். நாயர் ஆங்கிலேயர்களே சொக்கக் கூடிய ஆங்கிலத்தில் புள்ளி விவரங் களை எடுத்து வைத்துப் பிளந்து தள்ளினார். பார்ப்பனர் அல்லாதா ருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் சட்டமன்றத்தில் தனித் தொகுதியின் தேவையை வெகுவாக வலியுறுத் தினார்.

இதுகுறித்துக் கருத்துகளைக் கூற இருவரைக் கொண்ட குழு ஒன்றை வெள்ளை அரசு நியமித்தது. அதற்கு சவுத்பரோ கமிட்டி (South Borough Franchise Committee என்று பெயர்.

என்ன அநியாயம் என்றால். அந்தக் குழு உறுப்பினர்கள் இருவருமே பார்ப்பனர்கள்! வி.எஸ். சீனிவாச சாஸ்திரி, எஸ்.என். பானர்ஜி என்ற இரு நபர்கள்தான் அவர்கள். நண்டை சுட்டு நரியைக் காவல் வைத்த கதையாகி விட்டது. எதிர் பார்த்தபடியே அந்த இரு பார்ப் பனர்களும் வகுப்புரிமைக்கு எதி ராகக் கருத்துகளைத் தெரிவித்து விட்டனர்.

இந்தக் கமிட்டியை புறக்கணிக்கு மாறு மதுரையில் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாதார் மாநாடு (1918 அக்டோபர் 13) வேண்டுகோள் விடுத்தது.

நல்ல வாய்ப்பாக ஆங்கிலேயர் அரசு அந்த இரு நபர் குழுவின் அறிக் கையை ஏற்றுக் கொள்ளாமல் இரண் டாவது முறையாக ஒரு வாய்ப்பினை அளித்தது. அதற்கென நியமிக்கப் பட்ட நாடாளுமன்ற பொறுக்குக் குழு முன் தங்கள் வாக்கு மூலங்களை அளிக்க இங்கிலாந்துக்கு வர அழைப்புக் கொடுக்கப்பட்டது.

நீரிழிவு நோயாளியான டாக்டர் டி.எம். நாயர் லண்டன் சென்றார். அங்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டார். கே.வி. ரெட்டி நாயுடு, ஆற்காடு இராமசாமி முதலியார் ஆகியோரும் லண்டன் சென்றிருந் தனர்.

மருத்துவமனையிலேயே அறிக்கை தயாரிக்கப்பட்டது. மருத்துவ மனையிலிருந்து குழுவைச் சந்திக்க நாயரால் முடியாத உடல் நிலையில், அந்தக் கமிஷன் உறுப்பினர்களே மருத்துவமனைக்குச் சென்று நாயரின் சாட்சியத்தைப் பெறுவதாக முடிவு செய்தனர். ஆனாலும் அந்தச் சாட்சி யத்தை அளிப்பதற்கு முன்பாகவே டாக்டர் நாயர் - தந்தை பெரியார் அவர்களால் தென்னாட்டு லெனின் என்று அழைக்கப்பட்ட அந்த வீரத் திருமகன் இறுதி மூச்சைத் துறந்தார். நாயர் மறைவு செய்தியைக் கேட்டு அக்ரகாரம் ஆனந்தக் கூத்தாடியது. சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெரு பிள்ளையார் கோயிலில் ஆயிரக் கணக்கான தேங்காய்களை உடைத் தனராம் அக்ரகாரத் திருமேனிகள்.

அதைவிட கொடுமை என்ன தெரி யுமா? பண்பாட்டுக்கே பிறந்தவர்கள் போல ஆனந்தப் பல்லவி பாடும் இந்தப் பார்ப்பனர்களின் யோக் கியதை என்ன? காங்கிரஸ் சார்பில் சாட்சியம் அளிக்க அப்பொழுது அங்குச் சென்றிருந்த சர். சி.பி. ராமசாமி அய்யர், சுரேந்திர நாத் பானர்ஜி, திலகர், கோகலே, சத்ய மூர்த்தி அய்யர், ஆகிய பார்ப்பனர்கள் ஒரு மனிதாபிமான அடிப்படை யில்கூட, பண்பாட்டின் அடிப் படையில்கூட மரண மடைந்த நாயர் உடலுக்கு மரியாதை தெரிவிக்கச் செல்லவில்லை.

இந்த யோக்கியதையில் உள்ள பார்ப்பனர்கள்தான் மல்லுக்கட்டி பேனா பிடிக்க முன் வந்துள்ளனர். பார்ப்பனர்கள் தம் தலைவர்களின் யோக்கியதையே இந்தத் தரத்தில் இருக்கிறது என்றால் சோ போன்ற வர்களின் தரம் தகரடப்பாவாகத் தானே இருக்கும்!

வீரமகன் டாக்டர் டி.எம். நாயர் மறைந்து விட்டாலும், அங்கு சென்றி ருந்த கே.வி. ரெட்டி நாயுடு அவர்கள் டாக்டர் நாயர் நாள்குறிப்பிலிருந்து தகவல்களை தொகுத்து, பத்து நாட்கள் இரவு பகலாக உழைத்து 18 பக்கங்கள் கொண்ட அரிய அறிக் கையினைத் தயாரித்து நாடாளு மன்றக் குழுவின்முன் மெச்சத் தகுந்த முறையில் சாட்சியம் அளித்தார்.

இந்தியா என்பதை ஒரு நாடாகக் கருத இயலாது. குறிப்பாக தென்னிந்தியாவில் பார்ப்பனருக்கும், பார்ப்பனர் அல்லாதாருக்கும் அடிப்படையிலே இன வேறுபாடு உண்டு. முன்னவர் ஆரியர் இனத்தைச் சேர்ந்தவர்; பின்னவர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்.

மதத்தின் பெயராலும், வர்ணா சிரம தர்மத்தின் பெயராலும் சிதறுண்டு திணறும் பார்ப்பனர் அல்லாத மாபெரும் சமுதாயமானது யானைப் பாகனிடம் அடங்கிப் போகப் பழக்கப்பட்ட யானைக்குச் சமமானது; சின்னஞ்சிறு குட்டிச் சமுதாயமான பார்ப்பனர் யானைப் பாகனைப் போல் பார்ப்பனர் அல்லாத பெரிய சமுதாயத்தைப் பன்னெடுங்காலமாக அடக்கி வைத்திருப்பதில் வல்லவர்கள், வஞ்சகர்கள். ஆனால், என்றெனும் ஒரு நாள் எதிர்த்து பாகனை விரட் டும் யானைபோல, பார்ப்பனர் அல் லாதார் எழுச்சிக்குப் பார்ப்பனர் கூடிப் பேசி முடிவு எடுக்க வேண்டும் என்றும், முடிவு ஏற்படா விட்டால் நடுவர் குழுவின் தீர்ப்புக்கு விட வேண்டும் என்றும் அந்த அறிக் கையிலே குறிப்பிட்டிருந்தார் கே.வி. ரெட்டி நாயுடு என்னதான் பிரிட் டீஷார் நல்லாட்சி நடத்தினாலும், அது எவ்வாறு இந்தியர்கள் தங் களைத் தாங்களே ஆண்டு கொள் ளும் சுயாட்சிக்குத் தகுந்த மாற்று ஆகாதோ, அதுபோலவே பிராம ணர்கள் என்னதான் நல்லாட்சி கொடுத்தாலும் அது பிராமண ரல்லாதாரின் சுயாட்சிக்குத் தகுந்த மாற்றாகாது என்னும் வைர வரிகளை அதில் பதித்திருந்தார்.

அதற்குப் பலனும் கிடைத்தது. சென்னை மாநில சட்டமன்றத்தில் ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதி கள் 132; அதில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட வேண்டிய தொகுதிகள் 98; இதில் 65 பொதுத் தொகுதிகள், 33 தொகுதிகள் சிறப்புத் தொகுதிகள்; இதில் 28 தொகுதிகள் பார்ப்பனர் அல்லாதாருக்கு என்று ஒதுக்கப் பட்டன. ஒதுக்கப்பட்ட தொகுதிகள் தவிர மீதித் தொகுதிகளிலும் பார்ப் பனர் அல்லாதார் போட்டியிடலாம் என்று நிருணயிக்கப்பட்டது.

1920 நவம்பர் 20இல் தேர்தல் நடைபெற்றது. நீதிக்கட்சிக்கும் ஹோம் ரூல் கட்சிக்கும்தான் போட்டி காங்கிரஸ் போட்டியிடவில்லையென் றாலும் காலித்தனத்தைக் கட்ட விழ்த்து விடும் பணியை மட்டும் தவறாமல் செய்தது.

கழுதைகளின் கழுத்தில் எனக்கு ஓட்டுப் போடு என்று எழுதிய அட் டைகளைக் கட்டி, அதன் வாலில் காலி டின்களைக் கட்டிக், கலாட்டா செய்வதிலும், காலித்தனத்தில் ஈடுபடுவதிலும் அலாதியான ஆனந்தம் அதற்கு.

சென்னை மாகாண சட்ட சபைக்கான 127 இடங்களில் நீதிக்கட்சி 63 இடங்களில் மகத்தான வெற்றியை ஈட்டியது. நியமன உறுப்பினர்கள் 18 பேர்களும் நீதிக்கட்சியின் ஆதரவாளர்களாகவே இருந்தனர்.

1920 முதல் கிட்டத்தட்ட 17 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த நீதிக்கட்சியின் சாதனைகள் சாதாரணமானவைகளா?

வாய்ப் புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என்று அக்கிரகார வாசிகள் பேனா பிடிக்கிறார்களே அவர்களுக்குப் பதில் சொல்லுவ தற்காக அல்ல _ பார்ப்பனர் அல்லாத மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நீதிக்கட்சி ஆட்சியின் சாதனைகள் பட்டியலைத் தெரிவிப் பது அவசியம்தானே!

பல்வேறு போதைகளில் சிக்கிச் சீரழிந்து வரும் பார்ப்பனர் அல்லாத இளைஞர் சமூகம் -_ தெரிந்து கொள்ள வேண்டியவை மிகப்பல.

பெயருக்குப் பின்னால் ஜாதிவால் ஒழிந்து, அதற்குப் பதிலாக படிப்புப் பட்டங்கள் பவனி வருகின்றனவே - இதற்கெல்லாம் அஸ்திவாரம் போட்டவர்கள் யார்? ஆணி வேராக இருந்து உழைத்தவர்கள் யார்?

எந்தச் சமூகநீதி நம்மை உயர்த்தியது? இவற்றைத் தெரிந்து கொண்டால் பல போதைகள் நம்மை விட்டு ஒழிந்துத் தொலையும், அவற்றையும் அடுத்துப் பார்ப்போம்.

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (05) புளுகுணி சித்தர்களின் புராணம்!

நீதிக் கட்சியைப் பற்றி நிதான மின்றித் தூற்றித் திரியும் கும்பலுக்குத் தீர்க்கமான பதில்கள் நிச்சயம் உண்டு.

இன்று பார்ப்பனர் அல்லாதார் - குறிப்பாகத் தாழ்த்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் தலை நிமிர்ந்து முன்னேற்றத் திசையில் அழுத்தமான அடிகளை எடுத்து வைக்கின்றனர் என் றால் அதற்கான அடித்தளத்தை உரு வாக்கிய பெரும் சரிதம் அதற்குண்டு.

அன்றைக்கு 1610 இல் மதுரையில் படித்த 10 ஆயிரம் மாணவர்களும் பார்ப்பனர்களே என்று ராபர்டி நொபிலி எழுதிய கடிதம் கூறுகிறது.

இன்றைக்குச் சென்னைப் பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் படிக்கும் பார்ப்பனர் அல்லாத மாணவ, மாணவிகள் 1,45,450 (89 விழுக்காடு) என்று சென்னை பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் திருவாசகம் அவர்கள் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 95ஆம் ஆண்டு விழாவில் (20-11-2010) குறிப் பிட்டாரே!

இந்தச் சாதனைக்கு முஷ்டியை உயர்த்தி உரிமை கொண்டாடும் உரிமை, பெருமை நீதிக்கட்சிக்கு உண்டே!

தனது ஆதிக்கத்தில் மண் விழுந்த தற்குத் மண் வெட்டியைத் தூக்கியது இந்த நீதிக்கட்சியல்லவா என்கிற ஆத்திரத்தில்தான் இன்றைக்குக் கூட துக்ளக் வட்டாரம் வாயிலும் வயிற் றிலும் அடித்துக் கொண்டு மண்ணை வாரித் தூற்றக் கிளம்பியுள்ளது!

நீதிக் கட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டால் அது பல தொகுதி களாக விரிவடையும் என்றாலும் சில முக்கிய சாதனைகளை பட்டியலிட வேண்டியது அவசியமே!

முதல் அமைச்சரவையின் சாதனையை (1920-1923) ஆணை எண் 116 வாயிலாக நீதிக்கட்சியே வெளி யிட்டுள்ளது.

* பொதுத் துறையில் தாழ்த்தப் பட்டோர் உட்பட எல்லா மக்களுக்கும் உரிய இடங்கள் வழங்கப்பட்டன

* துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படகர்கள் ஆகியவர்களுக் காகக் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற் படுத்தப்பட்டன.

* தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்குப் பணி உயர்வு, உயர் பதவி நியமனங்கள் செய்யப்பட்டன.

* தாழ்த்தப்பட்டோர்க்கு வீட்டு மனைகள், குடியிருப்புகள் அமைத்துத் தரப்பட்டன. சாலைகள் போடப்பட் டன. அவர்களின் குழந்தைகளுக்குப் பள்ளிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

* தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதி தனி அலுவலர்கள் நியமிக்கப் பட்டனர். பின்னர் தனி அலுவலர் என் பதை லேபர் கமிஷனர் என்று மாற்றினர்.

* தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் என் னென்ன சாதிகள் உள்ளன என்பதைத் தொகுக்கும் பணி மேற்கொள்ளப் பட்டது. * குறவர்களை எல்லா வகையிலும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டன.

* கோவை மாவட்டத்திலுள்ள வலையர், குறவர் ஆகியோரைக் குற்றப் பரம்பரையிலிருந்து மீட்க அவர்களின் குழந்தைகளுக்கு 25 - நிதி உதவிகள் (ஸ்காலர்ஷிப்புகள்) அளிக்கப்பட்டன.

* ஆதிதிராவிடர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டு அதனைப் பயன்படுத்த மூலதனம், பிற சாதியினரிடமிருந்து பாதுகாப்பு -_ அடமானம் வைக்காமல் இருக்க அறிவுரை இன்னும் பிற தொல் லைகளிலிருந்து மீட்பு என உதவிகள் செய்யப்பட்டன. * தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீட்டு மனை வாங்குவதற்குக் கடன் வசதி செய்து தரப்பட்டது.

* ஆதி திராவிடர்களுக்கு விவசாயத் திற்காக நிலங்களை ஒதுக்குகிற போது மரங்களின் மதிப்பு நில அளவைக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தனர்.

* அருப்புக் கோட்டையில் குறவர் பையன்களுக்குப் படுக்கை வசதி கொண்ட மன்றம் கட்டித்தர அளிக்கப் பட்ட தொகையை உயர்த்தித் தர உத்தரவு இடப்பட்டுள்ளது.

* மீனவர் நலன் காப்பதற்காக லேபர் கமிஷனர் நியமிக்கப்பட்டார்.

* கள்ளர் சமுதாய முன்னேற்றத் திற்காகப் புதிதாக லேபர் கமிஷனர் நிய மிக்கப்பட்டு அவர் சில வழிமுறைகளை உருவாக்கித் தர ஏற்பாடு செய்தனர்.

* நிலத்தில் கட்டடத்தைக் கட்டிக் கொண்டு நில வாடகை செலுத்து வோர்க்கு வாடகைதாரர் குடியிருப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச் சட்டப்படி நில உரிமையாளர்களால் அப்புறப்படுத்தப்படுவோம் எனும் பயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீங்கியது.

* பி. அண்டு சி வேலை நிறுத்தத்தின் விளைவுகளால் ஏற்பட்ட பாதிப்பு களுக்கு உதவிகள் செய்யப்பட்டன.

* தஞ்சை கள்ளர் மகா சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, அய்ந்து பள்ளி களைத் தஞ்சை வட்டாரத்தில் திறக்க உத்தரவிடப்பட்டது.

* ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத் திற்காகப் பொது மக்களின் உதவியையும் உறவையும் பலப்படுத்த அரசு வேண்டு கோள்களை அரசு ஆணையாகப் பிறப்பித்தது.

* குடிப் பழக்கம் உள்ளவர்களின் பழக்கத்தை மாற்ற மக்களை நெறிப் படுத்த ஆணை வெளியிடுதல்.

* ஆதி ஆந்திரர்களுக்கு சந்தை விலையில் நிலங்களை அளித்தல்.

* தஞ்சாவூர் கள்ளர் பள்ளிகளின் நடைமுறை செலவுகளை ஏற்றல்; சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளு தல், கடன் வசதிக்கு ஏற்பாடு செய்தல்.

* மலபார் மாவட்டத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிகள் திறக்கப் பட்டன.

* சென்னை நடுக்குப்பத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது.

* கிழக்குக் கடற்கரை ஊர்களில் ஆறு இரவுப் பள்ளிகள் திறக்கப்பட் டன. மேலும் மூன்று தொடக்கப் பள்ளிகள் நிறுவப்பட்டன.

* உள்ளாட்சி மன்றங்களில் தகுதியான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிடைக்கும்போது அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவு இடப்பட்டு இருந்தது.

* மருத்துவப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உதவி நிதி (ஷிவீஜீமீஸீபீ) பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப் பட்டது.

* அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமை நிலைநாட்டப்பட ஆண்டு தோறும் அறிக்கைகள் வெளியிடப்பட பொதுத் துறை கேட்டுக் கொள்ளப்பட்டது.

* தாழ்த்தப்பட்ட மாணவர்கள், கல்வி கற்பதற்கு கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்வதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. தடைகள் ஏதாவது செய்யப்படுமானால் உடன் மாற்று ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

* சென்னை மாகாணத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எஸ்.எஸ். எல்.சி. தேர்வுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

* கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் படிக்கும் பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு அரைச் சம்பளம் கட்டினால் போதும் எனச் சலுகை வழங்கப்பட்டு இருந்தது.

* தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகையைப் பெறுவதற்கு அவர்களின் எண்ணிக்கையை உயர்த் தியும் கூடுதல் நிதி அளித்தும் சலுகைகள் வழங்கப்பட்டன.

அரசு ஆணைகளின் தொகுப்பு:

1. பெண்களுக்கு வாக்குரிமை அர சாணை எண். 108 நாள்: 10-_05_-1921

2. பஞ்சமர் என்ற சொல் நீக்கப் பெறல் - ஆதிதிராவிடர் என அழைக்கப் பெறல். அரசாணை எண். 817 நாள் 25_-3_-1922

3. கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க குழுக்கள் அமைத்தல். அரசாணை எண். 536 நாள் 20-5-1922.

4. கல்வி மறுக்கப்பட்டுக் கிடந்த பார்ப்பனரல்லாத பிள்ளைகள் தொடக் கப் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் அரசாணை எண். 849 நாள் 21-6-1923.

5. தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர் களைக் கல்வி நிலையங்களில் மிகுதியாக சேர்க்க வேண்டும். அரசாணை எண். (அ) 205 நாள்: 11_-2_-1924; (ஆ) 1825 நாள்: 24-_9-_1924.

6. இந்து சமய அறநிலையச் சட்டம் அரசாணை எண். 29 நாள். 27_-01_-1925.

7. சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களைச் சேர்ப்பது குறித்த ஆணை அரசாணை எண். (அ) 636 நாள்: 2_0-5_-1922. (ஆ) 1880 நாள் 15-_9-_1928

8. வகுப்புரிமைக்காகப் பிறப்பிக்கப் பட்ட ஆணை அரசாணை எண்.226 நாள் 27-_2-_1929

9. சென்னை பப்ளிக் சர்வீஸ் கமிஷனை உருவாக்கல் அரசாணை எண். 484 நாள் 18-_10_-1929. பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர் களுக்கு நீதிக் கட்சியில் அலை அலையாக நன்மைகள் நடந்தேறியிருக்க நீதிக் கட்சி ஆட்சியைத் தலித் மக்கள் புறக்கணிப்பு என்று (துக்ளக் 13_-7_-2011) தலைப்புக் கொடுத்து எழுதுகிறது என்றால் இவர்களின் யோக்கியதையைத் தெரிந்து கொள்ளலாம்.

நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சரவையின் காலம் (1923_-1926). இந்தக் கால கட்டத்தில் நிறைவேற்றப் பட்ட இரு சட்டங்கள் முத்து முத் தானவை.

ஒன்று அறநிலையப் பாதுகாப்பு சட்டம் ஆகும்.

ஆண்டாண்டு காலமாகப் பார்ப் பனர்களின் அடுப்பங்கரையாக கோயில் கள் இருந்தன. கோயில் அர்ச்சகர்களைக் கோயில் பூனைகள் என்று கூறி ஒரு நூலையே எழுதியுள்ளார் கோவை கிழார். (1945).

கோயில் கொள்ளையைக் கட்டுப் படுத்தக் கொண்டு வரப்பட்டதுதான் இந்தச் சட்டம்.

பார்ப்பனர்கள் தலையில் அல்லவா கை வைத்து விட்டனர். விடுவார்களா? அதற்கு மேல் வாயை அகலப்படுத்த முடியாத அளவுக்கு அலறினார்கள்.

நீதிக்கட்சியினர் பார்ப்பனர்களை மட்டும் எதிர்க்க வில்லை. கடவுளையும் எதிர்க்கக் கிளம்பி விட்டார்கள். மதத்தை அழிக்க முனைந்துவிட்டார்கள். ஆண்ட வனையே சட்டம் போட்டுக் கட்டுப் படுத்தும் அடாத செயலை எவரும் ஆதரிக்க மாட்டார்கள். மதத்தின் புனிதத் தன்மையைக் கெடுக்கும் இம் மசோதாவை ஜாதி, மத வித்தியாசமின்றி, கட்சிப் பாகுபாடின்றி ஒருமனதாக எதிர்க்க வேண்டும்

- இப்படி பேசியவர் யார் தெரியுமா? பார்ப்பனர் குலத் திலகம் வாயாடி சத்தியமூர்த்தி அய்யர்வாள்தான்.

சட்டசபையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்ட போது ஒவ்வொரு பார்ப்பன மெம்பரும் தொண்டை கிழிய கத்தினர் -_ நா வறண்டு போகும் அளவிற்குப் பேசித் தீர்த்தனர். சிலர் சாபமிடவும், சபிக்கவும் செய்தனர். சத்தியமூர்த்தி அய்யர் இட்ட கூச்சல் ஒரே காட்டுக் கூச்சல்தான். ஆங்கி லத்தில் பேசியும், கத்தியும் போதாது என்று சமஸ்கிருதத்திலும் பேசினார் - கத்தினார்.

சமஸ்கிருதத்தில் பேசியதும், கதறியதும் பலன் அளிக்க வில்லை என்று சமஸ்கிருதத்திலேயே பாடவும் செய்தனர்.

(கே.குமாரசாமி எழுதிய திராவிடர் தலைவர் டாக்டர் நடேசனார் வாழ்வும் தொண்டும் பக்கம் 73)

இதனையும் மீறி சட்டம் நிறை வேற்றப்பட்டது.

பார்ப்பனர்களாலேயே ராஜதந்திரி என்று ஒப்புக் கொள்ளப்பட்ட பனகல் அரசர் ( ராமராயநிங்கர்) மிகச் சாதுரிய மாகக் காயை நகர்த்தி பார்ப்பனர் களுக்கு அல்வா கொடுத்துவிட்டார்.

அம்மசோதாவை நிறைவேற்றுவ தற்காக சிறப்பு உறுப்பினராக யாரை நியமித்தார் தெரியுமா? என்.கோபால் சாமி அய்யங்காரை. அந்தப்பதவிக்கான பெயர் எக்ஸ்பர்ட் மெம்பர் என்பதாகும். அடுத்துப் பாருங்கள்.

அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்தத் துறையின் தலைவராக யாரை நியமித்தார் தெரியுமா? ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதாசிவ அய்யரை.

உப்புக் கண்டம் பறிகொடுத்த பாப்பாத்தி மாதிரி பார்ப்பனர்கள் நெளிந்தனர். கோபால்சாமியை விஞ்சி விட்டாரே எக்ஸ்பர்ட் பனகல் அரசர்!

இத்தகைய சட்டத்தின் அவசியம் எத்தகையது என்பதற்கு சிதம்பரம் நடராசர் கோயில் சமாச்சாரத்தைத் தெரிந்து கொண்டால் போதுமே.

அந்தக் கோயில் தீட்சதர்களின் உடைமை என்றும் இந்து அறநிலை யத்துறையின் கீழ் வராது என்றும் சாதித்து வந்தனர்.

மாநில அரசு எவ்வளவோ முயன்றும் நீதிமன்றம் சென்று தடை ஆணை வாங்கி விடுவார்கள் தீட்சதர்கள்.

2006 இல் மானமிகு கலைஞர் அவர் கள் முதலமைச்சராக வந்தபோதுதான் சிதம்பரம் கோயிலை வகையாக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தினார். (இப்பொழுது கூட அதனை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில்தான் உள்ளது? விடுவார்களா ருசி கண்ட பூனைகள்)

தீட்சதர்கள் கையிருப்பில் சிதம்பரம் கோயில் இருந்த போது அவர்கள் நீதிமன்றத்தில் காட்டிய கணக்கு என்ன தெரியுமா? ஆண்டு ஒன்றுக்கு வரவு ரூ 33,199 ; செலவு ரூ.33 ஆயிரம் மிச்சம் ரூ.199 என்று பேட்டா செருப்பு விலை போல சொன்னார்கள்.
அதே கோயில் இந்து அறநிலையத் துறையின் கீழ் வந்த நிலையில் அதன் வருமானம் என்ன தெரியுமா? கோயிலின் நிருவாகத்தை ஏற்றுக் கொண்ட 18 மாதங்களில் நிதி வருவாய் 25 லட்சத்து 12 ஆயிரத்து485ரூபாய். (இதில் டாலர்கள், தங்கம், வெள்ளி காணிக்கைகள் அடங்காது.)

இப்படி எவ்வளவு காலமாகவோ கொள்ளை அடித்துக் கொண்டு உல்லாச வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த கூட்டத்தின் குரல் வளையை நெருக்கிய சட்டத்தை நீதிக் கட்சிதான் கொண்டு வந்தது. பார்ப்பனர்களுக்கு உள்ளபடியே கடவுளிடத்தில் பக்தி இருக்குமானால் கோயில் கொள்ளையர்களிடமிருந்து கோயில் சொத்துக்களை மீட்ட நீதிக்கட்சிக்கு ஒரு நெடும் சரணம் போட வேண்டுமே - போடுவார்களா?

தேவதாசி ஒழிப்புச் சட்டம்

குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த பெண்களை கோயிலுக்குப் பொட்டுக் கட்டிவிட்டு தேவரடியார் (தேவடியாள் என்றுதான் வழக்கில் சொல்லுவார்கள்) என்று முத்திரை குத்தும் கேவலமான முறை ஒழித்துக்கட்டப் பட்டதும் நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்தான்!

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியார் அம்மையார்தான் இதற்கான மசோ தாவை முன்மொழிந்தார். அதற்கும் பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்பு! - அதிலும் திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் வாள்தான் அண்டங்காக்கைக் கூச்சல்.

தாசிகுலம் தோன்றியது நம்முடைய காலத்தில் அல்ல. வியாசர், பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டு வருகிறது. பலருக்கும் இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டும் வருகிறது. இப்படிக் கூறுவதால் என்னைத் தாசிக் கள்ளன் என்று கூடக் கூறலாம். அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை.

சமூகத்திற்கு தாசிகள் தேவை என்பதைத் திரும்பச் செல்ல விரும்பு கிறேன். தாசிகள் கோயில் பணிக் கென்று படைக்கப்பட்டவர்கள். அது சாஸ்திர சம்மதமானது. தாசிகளை ஒழித்துவிட்டால் பரதநாட்டியக் கலை அழிந்து விடும். ஆண்டவன் கட்ட ளையை மீறுவது அடாத செயலாகும். அநியாயம் ஆகும்! - என்று ஆகாயத்துக்கும், பூமிக்கும் தாவினார்.

தந்தை பெரியார் சவுக்கடி கொடுத் தது போல பதிலடி கொடுத்தார்.

ஒரு குலத்தில் மட்டும்தான் தாசிகள் தோன்ற வேண்டுமா? இதுதான் ஆண்டவன் கட்டளையா? மற்றக் குலத்துப் பெண்களும் மாறி மாறிப் பொட்டுக் கட்டிக் கொள்ளக் கூடாதா? என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் படிக் கேட்டார்.

சட்டமன்றத்தில் ஒரு பெண்ணாக இருந்த டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் சத்தியமூர்த்தி அய்யரை நோக்கிப் போட்டார் கிடுக்கிப்பிடி! ரோஷம் இருந்தால் மனுஷன் தூக்கு மாட்டிக் கொண்டு சாகலாம்தான்!

தொன்றுதொட்டு உள்ள இந்த வழக்கத்திற்கு இது காறும் இருந்து வந்த எங்கள் குலப் பெண்கள் செய்தது போதும்; இனி உங்கள் குலப் பெண்கள் தேவர்க்கு அடியார்களாக இருந்து மோட்சப் பிராப்தி பெறலாமே! என்றாரே பார்க்கலாம். வாயாடி சத்தியமூர்த்தி, வாயைப் பொத்தி மவுன சாமியார் ஆகிவிட்டார்.

திருவாளர் சத்தியமூர்த்தி, இந்த மசோதாவை எதிர்த்துப் பேசும் போது சொன்ன ஒரு கருத்து மிகவும் கவனிக்கத் தக்கது. பார்ப்பனர்கள் எந்த அளவிற்கு எச்சரிக்கையாக இருக்கக்கூடியவர்கள் என்பதற்கான எடுத்துக்காட்டு இது.

இன்று தேவதாசி தொழிலை நிறுத்தினால் ராமசாமி நாயக்கர் நாளை அர்ச்சகர் தொழிலை நிறுத்த சட்டம் செய்ய வந்து விடுவாரே! என்று ஆத்திரப்பட்டுப் பேசியிருக்கிறார். (அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த போராட்டம், கலைஞர் ஆட்சியில் அதற்கான சட்டம் - அதனைத் தொடர்ந்தது.

69 சதவிகித அடிப்படையில் அனைத்து ஜாதியினருக்குமான அர்ச்சகர் பயிற்சி _ உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நடைமுறைப் படுத்தப்படாமை - இவற்றையும் நினைவில் கொள்க!) சத்தியமூர்த்தி அய்யரின் கணக்கு சரிதானே!

வகுப்புரிமைச் சட்டம்

நீதிக்கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் பி.சுப்பராயன் முதல் அமைச்சராக இருந்த போதுதான் ( 4-12-1926 - 27-10-1930) எஸ். முத்தையா முதலியார் அவர்களின் முயற்சியால் முதல் இடஒதுக்கீட்டுச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

தொடக்கத்தில் சுயராஜ்யக் கட்சி (காங்கிரசின்) ஆதரவுடன்தான் டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையை அமைத்தார். இந்த அமைச்சரவையில் ஆரோக்கியசாமி முதலியார், ரங்கநாத முதலியார் ஆகியோர் இரு அமைச் சர்கள்.

சைமன் கமிஷனை வரவேற்பதா, கூடாதா என்ற பிரச்சினையில் சுயராஜ்யக் கட்சிக்கும், முதல் அமைச்சர் டாக்டர் சுப்பராயனுக்கும் கருத்து வேற்றுமை வெடிக்க, அமைச்சரவை யிலிருந்த இரு அமைச்சர்களும் பதவி விலகினர்.

அந்தச் சந்தர்ப்பத்தில் நீதிக்கட்சி டாக்டர் சுப்பராயனுக்கு ஆதரவு தந்த தால் ஆட்சி கவிழாமல் காப்பாற்றப் பட்டது. எஸ். முத்தையா முதலியாரும், எம்.ஆர். சேதுரத்தின அய்யரும் அமைச்சரவையில் இடம் பெற்றனர். ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் ஆளும் கட்சியின் கொறாடாவானார். இந்த அமைச்சரவை பதவி ஏற்ற நாள் 1928 மார்ச் 16.

நீதிக்கட்சி ஆதரவு பெற்ற இந்த அமைச்சரவையில் தான் எஸ். முத்தையா முதலியார் அவர்களின் சிறப்பான முயற்சியால் முதல் இட ஒதுக்கீடு உத் தரவு (Communal G.O.) நிறைவேற்றப்பட் டது. நிறைவேற்றப்பட்ட நாள் 13_-9_-1928 (அரசு ஆணை எண். பொது 744).

உண்மை இவ்வாறு இருக்க துக்ளக்கில் (13.-7-.2011) கம்யூனல் ஜி.ஓ. என்ற தலைப்பில் திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்த பேனாவைத் தூக்கிக் கொண்டு கிளம்பி உள்ள திருவாளர் லட்சுமி நாராயண அய்யர் அண்டப் புளுகு, ஆகாசப் புளுகாக காங்கிரசின் ஆதரவு பெற்ற சுப்பராயன் அமைச் சரவைதான் கம்யூனல் ஜி.ஓ. ஆணையை நிறைவேற்றியது என்று கொஞ்சம் கூடக் கூச்ச நாச்சமில்லாமல் புளுகின்றார் என்றால், இந்தப் புளுகினிச் சித்தர் களைப் பற்றி என்ன எடை போட?

பொய்யும், புனைசுருட்டும் செய்தாவது நீதிக் கட்சியை - பார்ப்பனர் அல்லாத அமைப்பை, திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்திக் காட்ட வேண்டும் என்கிற மூர்க்கத் தனம்தானே இதன் பின்னணியில் இருக்கின்றது.

இதற்கும் ம.பொ.சி.யைத் வேறு துணைக்கழைத்துக் கொள்கிறார். ம.பொ.சி எழுதும் சரக்கின் பொய்மை யும் இதன் மூலம் அம்பலமாகிவிட்டது.

பனகல் அரசர் ஆட்சியின் சாதனைகளைப் பாரீர்!

கல்லூரி முதல்வர்கள் எல்லாம் பார்ப்பனர்களாகவே இருந்த நிலையில் பார்ப்பனர் அல்லாத மாணவர் சேர்க்கைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டு இருந்த கால கட்டம் அது; பனகல் அரசர் என்ன செய்தார்? ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர் சேர்க்கைக்குக் குழுக்கள் அமைக்க உத்தரவிட்டார். (ராஜாஜி அவர்கள் 1937 இல் ஆட்சிக்கு வந்த போது இந்த முறையை நீக்கினார் என்பதைக் கவனித்துக் கொள்க!)

மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற பார்ப்பன சூழ்ச்சியைத் தவிடு பொடியாக்கினார் பனகல் அரசர்.

சென்னை மாநிலக் கல்லூரி சமஸ்கிருதப் பேராசிரியர் குப்புசாமி சாஸ்திரிக்கு மாத சம்பளம் ரூ. 300, தமிழ்ப் பேராசிரியர் கா. நமசிவாய னாருக்கு மாதச் சம்பளம் ரூ.81 - இந்த பேதத்தை நீக்கியது இவ்வாட்சியே.

1922 ஆம் ஆண்டு மார்ச்சு 25 முதல் பழந்தமிழ்க் குடிகளைப் பறையர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் அழைக் கப்படுவதை மாற்றி ஆதிதிராவிடர் என்று அழைக்கப்படவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.


1923 இல் புதிய பல்கலைக் கழகம் காண சட்டம் இயற்றப்பட்டது. பின்னா ளில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உருவாக இது காரணமாயிற்று.

ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த மருத்துவத் துறையை இந்திய மயமாக்கிய பெருமையும் நீதிக்கட்சி முதல் அமைச்சர் பனகல் அரசரையே சாரும். அய்ரோப்பிய உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கிடையேதான் இந்தச் சட்டம் நிறைவேறியது.

வெள்ளைக்காரர்களுக்கு வால் பிடித்தவர்கள் ஜஸ்டிஸ் கட்சியினர் என்று சொல்பவர்களின் பற்களை உடைக்கும் இந்தச் சட்டம். முதன் முதலில் சென்னையில் இந்திய மருத் துவக் கல்லூரியும் இப்பொழுதுதான் ஏற்படுத்தப் பட்டது.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதம் படிப்பதற்குத்தான் வழி இருந்ததே தவிர தமிழ்ப் படிக்கக் கதவு அடைக்கப்பட்டது. சென்னை பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு தமிழைக் கட்டாய பாடமாக்க மறுத்தது.

இதனை எதிர்த்து நீதிக் கட்சியைச் சேர்ந்த இராஜரத்தின முதலியார் தீர்மானம் நிறைவேற்றிக் கண்டனம் தெரிவித்தார்.

நீதிக்கட்சி பிரமுகர்கள் ஆர். வெங் கடரத்தினம் நாயுடு, டி.என்.சிவஞானம் பிள்ளை, எஸ்.முத்தையா முதலியார், டாக்டர் ஏ.இலட்சுமணசாமி முதலியார் போன்ற தலைவர்கள் போராடிப் போராடிதான் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழி கற்பிக்கப் படுவதற்கு வழி வகுத்தனர். (தமிழ் நாட்டிலேயே இப்படி ஒரு நிலை!)

வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்தபோதுதான் 1921 இல் பள்ளிகளில் இலவச நண்பகல் உணவு அளித்தார். இதற்காக சென்னை மாநகராட்சி பணம் செலவழிப்பதை நகராட்சி சட்டத்தைத் திருத்தி மாநில அரசே ஏற்றுக் கொண்டது. (அரசாணை எண். 1008 (L & M) நாள்:7-6-1922.

இதன் காரணமாக பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதி கரித்தது.

இன்னும் ஒரு குறிப்பிடத் தகுந்த தகவல் உண்டு. இலவச இரவுப் பள்ளிகள் நடத்த முன்வந்தால், மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிலைப்பாடுதான் அது. பகல் பொழுதில் பணியாற்றச் செல்வோர் இரவில் படிக்கும் ஒரு வாய்ப்புக்குத் கதவைத் திறந்துவிட்டவர் நீதிக்கட்சித் தலைவர் சர். பிட்டி. தியாகராயர்தான்.

தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு அரசினர் கல்லூரி சமஸ்கிருதக் கல்வி நிலையமாக இருந்ததை மாற்றி, தமிழும் சொல்லிக் கொடுக்கப்பட ஆவன செய்தார் ஜில்லா போர்டு தலைவராக இருந்த நீதிக்கட்சித் தலைவர் ஏ.டி.பன்னீர் செல்வம்.

பார்ப்பனர்களுக்கு மட்டும் வடித்துக் கொட்டப்பட்டுக் கொண்டிருந்த ராஜா மடம், உரத்தநாடு விடுதிகளை மற்றவருக்கும் திறந்து விட்ட தகைமையும் அவரையே சாரும்.

இராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராக இருந்த ஊ.பு.அ. சவுந் தரபாண்டியன், பேருந்துகளில் தாழ்த் தப்பட்டவர்களை அனுமதிக்கா விட்டால் பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று ஆணையிட்டார்.

தாழ்த்தப்பட்டவர்களைப் பள்ளிகளில் சேர்க்காத பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தப்படும் என்று ஆணையிட்டவர் தாலுகா போர்டு தலைவராக இருந்த நீதிக் கட்சி முன்னணித் தலைவர்களுள் ஒருவரான சிவகங்கை எஸ்.இராமச்சந்திரனார்.

நீதிக்கட்சியின் நேர்மையும், நீதிநெறியும், தொண்டுள்ளமும், நிர்வாகத் திறனும் வரலாற்றில் விஞ்சி நிற்கக்கூடியவை.

வெளிநாடுகளிலிருந்து வரும் பார்லிமெண்டரியன்கள் சென்னைக்கு வந்து நீதிக்கட்சி நடத்தும் சட்டப் பேரவை நிகழ்ச்சிகளைக்கண்டு வியந் தும் பாராட்டியும் உள்ளனர்.

இத்தகைய இயக்கத்தின் மீது சேறு வாரி இறைக்க முண்டாசு கட்டி முன் வருகின்றனர் என்றால் அது அவர்கள் நேர்மையற்ற- தன்னல வெறியுடைய ஆரியத் தன்மையைத்தான் அடை யாளம் காட்டும்.

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (6) குளவிக் கூட்டில் கை வைக்காதீர்!

ரௌலட் சட்ட எதிர்ப்பு (1919), ஜாலியன் வாலாபாக் படுகொலை எதிர்ப்புக் கிளர்ச்சி (1919), ஒத்துழை யாமை இயக்கம் (1920), பிரிட்டிஷ் அரசு பரம்பரையின் கன்னாட் கோமகன் இந்திய வருகை பகிஷ்கரிப்புப் போராட் டம் (1921), வேல்ஸ் இளவரசர் வருகை பகிஷ்கரிப்புக் கிளர்ச்சி (1921), நாகபுரி கொடிப் போர் (1923), வைக்கம் சத்தியாக்கிரகம் (1924), நீலன் சிலையை அகற்றக்கோரி நடந்த வீரப் போராட்டம் (1927), சைமன் கமிஷன் எதிர்ப்புக் கிளர்ச்சி (1928), ஈடு இணையற்ற உப்புச் சத்தியாக்கிரகம் (1930), பிரிட்டனின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் வெள்ளி விழாக் கொண் டாட்ட பகிஷ்கரிப்பு (1934), தனி நபர் சத்தியாக்கிரகம் (1940), ஆகஸ்ட் இயக்கம் (1942) ஆகிய விடுதலைப் போரின் கிளர்ச்சிகளையும், சத்தியாக் கிரகங்களையும் ஜஸ்டீஸ் கட்சியினர் எதிர்த்து ரகளை செய்தார்கள். அவற் றுக்குப் பல வகைகளிலும் இடையூறு களை விளைவித்தார்கள்.

இவை துக்ளக்கின் குற்றச்சாற்றுகள் (13_-7_-2011) இந்தியாவில் இரட்டை ஆட்சி முறை நடைபெற்றுக் கொண்டி ருந்த காலகட்டம். முக்கியமான துறைகள் எல்லாம் வெள்ளைக்காரர் களின் வசம்தான். சில குறிப்பிட்ட துறைகள் மட்டும்தான் தேர்ந்தெடுக் கப்பட்ட சட்ட சபைக்கு.

இதில் இரண்டையும் போட்டுக் குழப்பி நீதிக்கட்சியின் மீது அபாண்ட பழி சுமத்துவதுதான் வேடிக்கை போக்கிரித்தனம்கூட!

1922 ஆம் ஆண்டு தலைச்சேரி சப்_டிவிஷன் மாஜிஸ்டிரேட் டாட் வெல் அய்.சி.எஸ். என்ற வெள்ளைக் காரர் எல்.எஸ். பிரபு என்ற பெண்ணை காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை குறித்த வழக்கில் விசாரித்தார். நீதிபதி அந்தப் பெண்ணுக்கு அபராதம் விதித்தார். அந்தப் பெண் அபராதம் செலுத்த மறுத்தார். உடனே நீதிபதி அந்தப் பெண்ணின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த சங்கிலியை அகற்றுமாறு உத்தரவிட்டார்.

அது தாலி என்று கூட வெள்ளைக்கார நீதிபதிக்குத் தெரிய வில்லை. இதற்கும் நீதிக்கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையவே கிடையாது.

நீதிக்கட்சி ஆட்சி நடந்து கொண்டிருந்தது என்பதை சாக்காக வைத்து, தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆற்காடு இராமசாமி முதலியாரை பார்த்து திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் தாலி அறுத்த இராமசாமி முதலியாருக்கா ஓட்டு? என்று பிரச்சாரம் செய்தார் என்றால், அந்த சத்தியமூர்த்தியின் பரம்பரையின் வால் இன்னும் நீண்டு கொண்டு இருக் கத்தான் செய்கிறது என்பதற்கு அடை யாளம்தான் இத்தகு குற்றச்சாற்று.

தேர்தலில் சத்தியமூர்த்தி அய்யர் எப்படியெல்லாம் பிரச்சாரம் செய்தார் என்றால், இன்றைக்கு நிலவும் அரசியல் எல்லாம்அவரிடம் பிச்சை வாங்க வேண்டும்.

எனக்கு வாக்களிப்பவர்களின் செருப்புக்கு என் முதுகுத் தோலைத் தந்து உதவுவேன்! பகீரதனைப் போல் வானத்துக் கங்கையைக் கொண்டு வருவேன்! நீதிக்கட்சியினர் ஆள்வதால் தான் நாட்டில் மழை பெய்யவில்லை என்கிற பாணியில் சகட்டு மேனிக்கு வார்த்தைகளை அள்ளிக் கொட்டும் ஆசாமி அவர்.

உண்மைக்கும் அவருக்கும் உறவு கிடையாது.

இந்தச் சத்தியமூர்த்தி, எப்படிப்பட்ட யோக்கியர் தெரியுமா? இதோ பாரத தேவி (8.12.1943) கூறுகிறது - கேண்மின்!

சத்தியமூர்த்தி லஞ்சம் வாங்கு கிறாராமே என்று போகிறபோக்கில் சிலர் சொல்லிவிட்டுப் போய்விடு வார்கள். இதை அவரிடமே நேரில் ஒரு தரம் சொன்னேன். அவர் கொஞ்சம் கூட என்மீது கோபப்படவில்லை. நிதானமாக பதிலளித்தார்.

நாள் பூராவும் வேலை செய்ய வேண்டும். எங்கேயாவது பஞ்சாயத்து தேர்தலென்றால்கூட அதற்கு மேளம் வாசிப்பதற்கு சத்தியமூர்த்தி வர வேண்டும். நான் பணக்காரனில்லை. நான் எப்படிச் சாப்பிடுவது? இந்த நாட்டில் அரசியல்வாதிகளுக்காக கார்னீஜி நிதியா வைத்திருக்கிறார்கள்? தேர்தல் தம்பட்ட மடித்து விட்டு நானும், என் கடும்பத்தினரும் வாயு பக்ஷணம் செய்ய முடியுமா? லஞ்சம் யாரிடம் வாங்குகிறேன்? வெள்ளைக் காரனிடம் பணம் வாங்கிக் கொண்டு, அல்லது பட்டம், பதவி வாங்கிக் கொண்டு என் தேசத்தைக் காட்டிக் கொடுத்து விட்டேனா? யாராவது ஒரு பணக்காரனுக்கு அசெம்பளியில் ஒரு கேள்வி கேட்க வேண்டியிருக்கும். அவனிடம் பணம் இருக்கிறது. என்னிடம் கேள்வி கேட்கும் திறமை இருக்கிறது. எப்பொழுதாவது இதைச் செய்தால், இது லஞ்சமாகுமா? என்று சத்திய மூர்த்தி பதில் சொன்னார்.
(பாரததேவி 8.12.1943)

இலஞ்சம் வாங்குவதற்குப் பச்சை யாக நியாயம் கற்பிக்கும் இந்தப் பார்ப்பனர்கள்தான் மற்றவர்களைப்பற்றி விரலை நீட்டுகிறார்கள்.

அதே பாணியில்தான் குற்றச்சாற்று களை துக்ளக்கில் அள்ளி விட்டிக் கிறார் திருவாளர் லட்சுமி நாராயண அய்யர்.

பகிஷ்கரிப்புப் பட்டியலில் வைக்கம் சத்தியாக்கிரகத்தையும் இணைத்துள் ளார்களே. என்ன நிதானமாகத்தான் எழுதுகிறார்களா?

காங்கிரசில் இருந்தபோதே தந்தை பெரியார் தலைமை தாங்கி வைக்கம் சத்யாக்கிரகப் போராட்டம் நடை பெற்றது -திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கத்தில். இதில் நீதிக்கட்சி எங்கேயிருந்து வந்து குதித்தது?

வெள்ளைக்கார கவர்னர்களை, இளவரசர்களை யெல்லாம் காங்கிரஸ் புறக்கணித்தது போலவும், நீதிக் கட்சியினர் ஆலிங்கனம் செய்து வரவேற்றது போலவும் கதைத் துள்ளனரே -

உண்மை என்ன?

1898 ஆம் ஆண்டு சென்னையில் 14 ஆவது காங்கிரசில் லார்டு கர்சனை வரவேற்றுத் தீர்மானம் நிறைவேற்றப் படவில்லையா?

1901 இல் கல்கத்தாவில் நடந்த 17 ஆவது காங்கிரஸ் மாநாட்டில் 7 ஆவது எட்வர்ட் மன்னர் மகுடம் சூட்டிக் கொண்டமைக்கு மகிழ்ச்சித் தீர்மானம் நிறைவேற்றப்பட வில்லையா?

1905 இல் 21 ஆவது காங்கிரஸ் மாநாட்டில் எட்வர்ட் இளவரசர் இந்தியா வருவதை வரவேற்றுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மறைப்பது ஏன்?

1910 இல் அலகாபாத்தில் கூட்டப் பெற்ற 25 ஆவது காங்கிரஸ் மாநாட்டில் அய்ந்தாம் ஜார்ஜ் மன்னர் முடி சூட்டிக் கொள்வதற்கு ராஜபக்தி ஜொலிக்கும் தீர்மானத் தீவட்டியைத் தூக்கி நின்றது காங்கிரஸ் அல்லவா?

1914 இல் சென்னையில் நடைபெற்ற 29 ஆவது காங்கிரஸ் மாநாட்டுக்கு சென்னை கவர்னரே விஜயம் செய்தாரே. முதலில் ஒரு ராஜபக்தித் தீர்மானம்;- கவர்னர் வந்த பிறகு மறுபடியும் இன்னொரு முறை தீர்மானத்தை நிறைவேற்றி கவர்னர் கர்சானுக்குச் சோப்புப் போட்டவர்கள் யார்?

1917 _ -33ஆவது காங்கிரஸ் மாநாட் டின் கதை என்ன? மாண்டேகுவை வரவேற்று விளக்குப் பிடித்தவர்கள் யார்?

எதற்கெடுத்தாலும் ம.பொ.சி. - ம.பொ.சி. என்று துணைக்கழைத்துக் கொள்கிறதே துக்ளக் அந்த ம.பொ.சியை விட்டே அதே நூலான விடுதலை போரில் தமிழகம் என்பதிலிருந்தே, எடுத்து மொத்தினால் தானே சரியாக இருக்கும்.

வடநாட்டு மாநிலங்கள் அனைத்துமே தீவிரவாதிகள் என்ற பெயரால் காங்கிரஸ் தலைவர்கள் பலர்மீது பொய் வழக்குப்போட்டு, அவர்களை அரசாங்கம் சிறையில் அடைத்துவிட்ட நிலையில், எங்களால் வடமாநிலம் எதிலும் மாநாடு நடத்த இயலாது என்று மறுத்து விட்டார்கள்.

சென்னை மாகாணத்து மிதவாதிகள் கூட்டம் நாங்கள் நடத்துகிறோம் என்று சொல்லி 29ஆவது காங்கிரஸ் மாநாட்டை சென்னையில் நடத்த முன் வந்தார்கள். இதுகுறித்து ம.பொ.சி. என்ன எழுதுகிறார்?

காங்கிரஸ் மகாசபை கூடினால் ராஜ வாழ்த்துடன் நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் அல்லவா? மகாசபை கூடும் மாகாணத்து கவர்னரிடம் வாழ்த்துச் செய்தி பெற்று அதைப் பயப்பக்தியுடன் மகாசபையின் பிரதிநிதிகள் அனைவரும் எழுந்து நின்று கேட்கும் நிலையில் படிக்கவும் வேண்டுமல்லவா?

சக தேசபக்தர்கள் அந்நிய ஆட்சியின் அடக்குமுறைகளை அனுப வித்து வரும் நேரத்திலே, இந்தத் தன்மானமற்ற சடங்குகளோடு மகா சபை நடத்த வடபுலத்து மாநிலங் களுக்குத் துணிவு இல்லை.

சென்னை மாகாணத்துக்குத் தான் இருந்தது.

இங்கும் மயிலாப்பூர் வக்கீல் கூட்டத் திற்குத்தான் இருந்தது. அவர்களிலும் திரு கிருஷ்ணசாமி அய்யருக்குத்தான் இருந்தது என்று லட்சுமி நாராய ணய்யர்வாளுக்கு வேண்டப்பட்டவ ரான ம.பொ.சி.யே கேலியும் கிண் டலுமாக சென்னை பார்ப்பனக் கும்பலை தன்மான மற்றவர்கள் என்று சாடியதற்குப் பிறகும் -_ நீதிக்கட்சி வெள்ளையர்களுக்கு அடி பணிந்தது என்று எழுதிட யோக்கியதை உண்டா?

1918இல் வேல்ஸ் இளவரசர் வந் தாரே. அப்பொழுது நடைபெற்ற மாநாட்டில் வருக! வருக! கொடி பிடித்த கூட்டம் எது?

அந்த வேல்ஸ் இளவரசருக்கு யதாஸ்து கூறி வரவேற்றுக் கவிதை எழுதியவர்தானே இவாளின் திருவாளர் சுப்பிரமணிய பாரதியார்?

இப்படியெல்லாம் லாலி பாடி வெள்ளைக்காரர்களின் வாலும் காலும் பிடித்த ஒரு கூட்டம் பேனாவைப் பிடித்துச் சிலம்பம் ஆட ஆசைப் படலாமா?

1929 பிப்ரவரி 17,18 ஆகிய நாட்களில் செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரி யாதை முதல் மாகாண மாநாட்டுக்கு யார் யாரை எல்லாம் அழைத்தார் தந்தை பெரியார்? தனிப்பட்ட ஸ்திரீகளும் தங்களை விதவைகள் என்றோ, வேசிகள் என்றோ நினைத்துக் கொண்டிருப்ப வர்களும் அவசியம் வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம் என்றாரே, (குடிஅரசு 30.1.1929) இன்னொரு கூடுதல் தகவல் என்ன தெரியுமா? மாநாட்டில் விருதுநகர் நாடார் சமையல் என்ற அறிவிப்பு - ஏன் தெரியுமா? அந்தக் கால கட்டத்தில் நாடார்கள் என்றால் தாழ்வானவர்கள் என்ற மனப்பான்மை; தாழ்த்தப்பட்டவர்களைப் போலவே அவர்களும் கோயிலுக்குப் போகக் முடியாத நிலை, அப்படிப்பட்ட நிலையில் சுயமரியாதை மாநாட்டு விளம்பரத்தை இப்படிசெய்கிறார்! ஆனால் காங்கிரஸ் மாநாட்டிலே ஆச்சாரம், ஜாதி பார்த்து தனி இடங்கள் ஏற்பாடாம்! புரிந்து கொள்ள வேண்டாமா பூணூல் கூட்டத்தின் பூர்வோத்திரத்தை? நீடாமங்கலம் காங்கிரஸ் மாநாட்டில் பந்தியில் தாழ்த்தப்பட்டோர் சாப்பிட் டனர் என்பதற்காக அவர்களைக் கட்டி வைத்து அடித்து மொட்டை யடித்து அவமானப்படுத்தவில்லையா? 1885 இல் தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் 1929 ஆம் ஆண்டில்தான் பூரண சுதந்திரம் என்ற தீர்மானத்திற்கு வந்தது.

1942 ஆகஸ்டுப் போராட்டம் தோல்வி அடைந்த நிலையில் காங்கிரஸ் மீண்டும் எந்த முடிவுக்கு வந்தது?

முழு சுதந்திரம் வேண்டாம். சிவில் நிருவாகம் கொண்ட தேசிய நிருவாகம் போதும் என்று பிளேட்டைத் திருப்பிப் போடவில்லையா?

ஆகஸ்டு 15 _- 1947 இல் பெறப்பட்ட சுதந்திரம் கூட டொமினியன் அந்தஸ்து தானே தவிர முழு சுதந்திரம் அல்லவே!

ஒரு கால கட்டத்தில் அயர்லாந்து மாதான அன்னிபெசண்ட் தான் காங் கிரஸ் கட்சியின் மாதா! அக்கிரகாரத் தில் செல்லப் பெண்மணி! அவர் கேட்டது என்ன? தனி சுயராஜ்ஜியமா?.
பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு உட் பட்ட சுயாட்சி அந்தஸ்து இந்தியா வுக்கு வழங்கப்பட வேண்டும் (25.9.1915) என்றுதானே கேட்டுக் கொண்டார். ஜாலியன்வாலா படுகொலையை வெள்ளைக்காரர் சார்பில் ஆதரித் தவர்தானே இவர்? மறுக்க முடியுமா?

இந்திய மந்திரியின் நேர்ப் பார்வை யின்கீழ் திராவிட நாடு ஒரு தனி நாடா கப் பிரிக்கப்பட வேண்டும் என்று நீதிக் கட்சி கோரினால் அது குற்றம்; அதே கோரிக்கையை வேறு வார்த்தைகளில் காங்கிரஸ் கோரினால் அது சிலாக் கியமா? மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி என்கிற நீசத்தனம் தானே இது!

1916 இல் தொடங்கப்பட்ட நீதிக் கட்சி 1940 ஆகஸ்டு நான்கில் திருவாரூ ரில் நடைபெற்ற 15 ஆவது மாகாண மாநாட்டில், திராவிடர்களுக்கான கலை, நாகரிகம், பொருளாதாரம் ஆகி யவைகள் முன்னேற்றமடைவதற்கு, பாதுகாப்பதற்கு, திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம் இந்திய மந்திரியின் நேர் பார்வையின் கீழ் ஒரு தனி நாடாகப் பிரிக்கப்படவேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டது உண்மை தான்.

1944 ஆகஸ்டு 27 இல் நீதிக்கட்சி திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு திருச்சி புத்தூர் மைதானத்தில் (29-5-1945) நடைபெற்ற 17 ஆவது மாகாண மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மறைத்து எழுதுவது ஏன்?

1 (அ) திராவிட நாடு (சென்னை மாகாணம்) சமுதாயம், பொருளாதாரம், தொழில் துறை, வியாபாரம் ஆகிய வற்றில் பூரண சுதந்திரமும் ஆதிக்கமும் பெறவேண்டும்.

(ஆ) திராவிட நாடும், திராவிட நாட்டு மக்களும், திராவிட நாட்ட வரல்லாத அந்நியர்களின் எந்தவிதமான சுரண்டல்களிலிருந்தும் ஆதிக்கத்தி லிருந்தும் விடுவிக்கப் பட்டுக் காப்பாற் றப்பட வேண்டும்.

(2) திராவிட நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஜாதி, வகுப்பு, அவை சம்பந்த மான உயர்வு, தாழ்வு இல்லாமல் சமு தாயத்திலும், சட்டத்திலும் சம உரிமை யும், சம சந்தர்ப்பமும் பெற்று சம வாழ்வு வாழச் செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மறைத்து எழுதினால்தான் மறைய வர்களின் பிழைப்பு நடக்குமோ!

அதே நேரத்தில் காங்கிரஸ் மாநாட்டின் யோக்கியதை என்ன? 1900_த்துக்குப் பின்னாலே நடந்த பல காங்கிரஸ் மாநாடுகளில் இந்து மகாசபை மாநாட்டையும் அதே காங்கிரஸ் மாநாட்டுப் பந்தலிலேயே நடத்தினார்களே! இதன் பொருள் என்ன? காங்கிரஸ் என்பது குறிப்பிட்ட மதத்தின், குறிப்பிட்ட உயர் ஜாதிப் பார்ப்பனர்களின் நலனுக்காக, வளமைக்காக நடத்தப்பட்டது என்பது விளங்கவில்லையா?

காங்கிரசின் போக்கு இந்து மகா சபையை அண்டி இருப்பதைப் பார்த்த பிறகும், முஸ்லிம்கள் தங்களுக்கென்று தனி அமைப்பைத் தோற்றுவித்தது எப்படி தவறாகும்?

அந்த ஜாதி அபிமானத்துடன்தான் துக்ளக்கும், லட்சுமி நாராயணன்களும் நீதிக்கட்சியைத் தூற்றியும், அன்றைய காங்கிரசின் கால் பிடித்தும் எழுது கின்றனர். பஞ்சாபைப் பொருத்தவரை இந்து மகாசபைக்கு யார் தலைவரோ அவரேதான் காங்கிரசுக்கும் தலைவர்!
கல்கத்தாவில் முதல் காங்கிரஸ் மாநாடு. பம்பாயில் இரண்டாவது மாநாடு, மூன்றாவது மாநாடோ சென்னையில். இம் மாநாடு பற்றி சுதேசமித்திரனில் வெளிவந்த விளம்பரம் என்ன தெரியுமா?

இவ்வருஷத்துக் காங்கிரஸ் சபையில் ஒரு முக்கியமான புது அம்சம். சாதி, ஆச்சாரம் பார்க்கும் பிரதிநிதிகளுக்குப் பிரத்தியேகமாக ஒரு பங்களாவை அவர்களுடைய சாதி, ஆச்சாரங்களுக்கு ஏற்றபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருக்கின்றன - என்பதுதான் சுயஜாதி மித்திரனின் அறிவிப்பு.

இந்த யோக்கியதையில் இவர்கள் கதை ஊளை நாற்றம் எடுக்கிறது. அதே நேரத்தில் நீதிக்கட்சியின் கோட்பாடு என்ன?

வெள்ளுடை வேந்தர் நீதிக்கட்சியின் தோற்றுநர்களில் ஒருவரான பிட்டி தியாகராயர் என்ன சொல்லுகிறார்?

பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிப்பது திராவிட மரபன்று; திருவள்ளுவர் முதலிய திராவிடத் தலைவர்கள் பிரம்மனின் முகத்துதித்தோம் யாம் என்று பெருமை பேசினாரில்லை; பிறப்பினால் ஏற்றத் தாழ்வு கற்பித்தோரும், நால்வகை சாதி இந் நாட்டில் நாட்டினோரும் ஆரியரே! அவ் வருணாசிரமக் கோட்டையை இடித்தெறிய 2400 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய புத்தர் முயன்றார்; முடியவில்லை. பின்னர் வந்த பற்பல சீர்திருத்தவாதிகள் முயன் றனர்; தோற்றனர்.

இராமானுஜரும், புரோகிதர் கொடுமைகளைக் களைந் தெறிய ஒல்லும் வழி முயன்றார்; தோல் வியே கண்டார். பார்ப்பனர் பிடி மேலும் மேலும் அழுத்தமுற்றே வந்தது. தீண் டாமை - அண்டாமை - பாராமை முதலிய சமுதாயச் சீர்கேடுகளும் படிப்படியே பரவிப் பெருகலாயின. அத்தகைய பலம் பொருந் திய சாதிக் கோட்டையைத் தகர்த்தெறிய இதுவே தக்க காலம்; இதுவே தக்க வாய்ப்பு -(1917-_இல் நடை பெற்ற சென்னை மாகாண முதலாவது ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டு உரையில் பேசியது.)

காங்கிரஸ் மாநாட்டுப் பந்தலிலேயே இந்து மகா சபை மாநாடு நடத்திய பார்ப்பன காங்கிரஸ் எங்கே ? சமத்துவ சங்கநாதம் செய்யும் இந்த நீதிக்கட்சி எங்கே?

காங்கிரஸ் மாநாட்டில் ஆச்சாரம் பேணும் அவர்களுக்கு தனி பங்களா ஏற்பாடு செய்யும் போக்கு எங்கே? ஜாதியைக் களைந்து சமத்துவப் பயிர் வளர்க்கும் பெருமகனார்களின் நீதிக் கட்சி எங்கே?

திருநெல்வேலியில் காங்கிரஸ் சார்பிலே தீண்டாமை ஒழிப்பு மாநாடு மதியம் தடபுடலான விருந்து பிரபல தேசப்பக்தரான விருதுநகரைச் சேர்ந்த கோவிந்தசாமி நாடார் சாப்பாட்டுப் பந்தலுக்குள் நுழைந்தார். அப்பொழுது அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் சொன்னார்கள். நாடாரே! உங்களுக்கு சாப்பாடு இங்கு இல்லை; அங்கே போங்கள் என்றார்கள்.

அதற்கு அவர் நானும் சைவம்தானே என்றார். சைவத்திற்கு இல்லை; நீங்கள் அங்கே போங்கள் என்று உரக்கச் சத்தம் போட்டுச் சொன்னார்கள் பார்ப் பனர்கள்.

கோவிந்தசாமி நாடாருக்கோ ஆத்திரம்! மாநாட்டை விட்டு வெளி யேறி தான் அணிந்திருந்த கதர்ச் சட் டையை நடுத் தெருவிலே கொளுத் தினார்.(Genisis of the Self - Respect Movement page 53) இவ்வளவுக்கும் அது தீண் டாமை ஒழிப்பு மாநாடே! இந்த யோக்கியதையில் உள்ள பார்ப்பனர்கள் நீதிக்கட்சிபற்றியும் சுயமரியாதை இயக்கத்தை பற்றியும் நாக்கூசாமல் உளறலாமா?

1927ஆம் ஆண்டு மதுரையில் நெல்லை எஸ். குமாரசாமி ரெட்டியார் தலைமையில் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டில் சென்னை மாநில கவர்னர்மீது நம்பிக்கை இல்லை என்று தீர்மானம் போட்டார்களே பார்ப்பனக் காங்கிரசு அப்பொழுது நினைத்தும் பார்க்க முடியுமா?

இன்றைய ஆக்ஷி ஏன் ஒழிய வேண்டும் என்று குடிஅரசு இதழில் (29.10.1933 பக்கம் 10,11) எழுதியதற்காக பிரிட்டீஷ் அரசால் அரசு வெறுப்புக் குற்றஞ்சாட்டப் பெற்று, தந்தை பெரியாருக்கு ஒன்பது மாத தண்டனை, ரூ.300 அபராதம் செலுத்தாவிடில் மேலும் ஒரு மாதம் தண்டனை குடிஅரசின் பதிப்பாளர் என்கிற வகையில் தந்தை பெரியார் அவர்களின் தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாள் அவர்களுக்கும் 6 மாதத் தண்டனை ரூ.300 அபராதம், கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதத் தண்டனை என்கிற வரலாறு எல்லாம் தெரியாமல் வாய்ப் புளித்ததோ மாங் காய் புளித்ததோ என்று பார்ப்பனர்கள் கிறுக்கலாமா?

சென்னை மாநாட்டில் சென்னை யிலிருந்து கூடிய பிரதிநிதிகள் 361 என்றால், அதில் பார்ப்பனர்கள் மட்டும் 138 என்றால், அந்தக் காலத்தில் அது அவாள் காங்கிரசாகவே இருந்தது என்பதற்கு வேறு அத்தாட்சியும் தேவையோ?

இந்த மாநாட்டில் கும்பகோணம் சங்கரமடத்துப் பிரதிநிதியும் கலந்து கொண்டார் என்றால் அந்த மாநாடு அசல் அக்கிரகாரத்து உக்கிராணம் தானே! இப்படிப்பட்ட காங்கிரசைப் பார்ப்பனர்கள் அந்தக் காலத்தில் கட்டிக் கொண்டு அழுததில் ஆச்சரியம் ஏது? அசல் அக்கிரகார அந்த கால கட்டக் காங்கிரசை இந்த 2011லும் துக்ளக் தூக்கிச் சுமக்க ஆசைப்படு வதன் சூட்சமமும் இதுதான்!

பாலகங்காதர திலகர் மறைந்த போது காந்தியார் அங்கு சென்றார் (1-8-1920). திலகரின் பாடையைத் தூக்குவதற்குக் காந்தியார் சென்றபோது அங்கிருந்த பார்ப்பனர்கள் நீ வைசியன்; இந்தப் பாடையைத் தொடக் கூடாது என்று கூறினார்களே! காந்தியாருக்கே அப்பேர்ப்பட்ட அவமரியாதை வருணாசிரமத்தின் பெயரில்!

இந்த நிலையில் பூணூல் தைரி யத்தில் இடக்கு மடக்காக எழுதினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்.

1907 ஆம் ஆண்டு சூரத் காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் ராஷ் பிகாரி கோஷ் என்பவர். அந்தக் கூட்டத்தை நடத்த விடாமல் மேடை மீது செருப்புகளை வீசியக் கூட்டத்திற்குத் தலைமை வகித் தவர் தான் இந்த பாலகங்காதர திலகர்.

காரணம் மகாசபைக்குத் தலைமை வகிப்பவர் பார்ப்பனர் அல்லாதவர் என்பதுதான். இந்த நிகழ்ச்சியை பல பொதுக்கூட்டங்களிலும் விரிவாக எடுத்துச் சொன்னார் தந்தை பெரியார்.

இந்தத் திலகர்தான் அரசியலில் இந்து மத நஞ்சை வெகுவாகத் திணித்தவர்.

ஆர்.எஸ்.எஸ்.சின் முன் னோடிப் பிதாமகர். விநாயகக் கடவுளை முன்நிறுத்தி அரசியலை மாசுபடுத்திய முதல் குற்றவாளி. விநாயகர் ஊர்வலம் என்ற நோய் நாடெங்கும் பரவச் செய்து அதன் மூலம் பார்ப்பனீய இந்து மத ஆதிக்கத்தினைத் தூக்கி நிறுத்தியவர்.

புனேயில் பிளேக் நோய் மூண்டது. அதற்குக் காரணம் எலிகள்தானே? அவற்றை வேட்டையாடியது வெள்ளை அரசாங்கம். அப்பொழுது திலகர் என்ன செய்தார் தெரியுமா?

அநியாயம்! அநியாயம்!! வெள்ளைக் காரன் நமது விநாயகரின் வாகனமான எலிகளைக் கொல்லுகிறான்; நமது கலாச்சாரத்தில் தலையிடுகிறான் என்று வெறியைக் கிளப்பி விட்டார். அதன் விளைவு இரு வெள்ளைக்கார அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில், இந்தத் தேசப் பக்தித் திலகத்துக்குப் பதினெட்டு மாதம் தண்டனை! அசிங்கத்துக்குப் பொட்டு வைத்த கதையல்லவா இது?

எவ்வளவு ஜாதி வெறி பிடித்தவர் என்பதற்கு எடுத்துக் காட்டுகள் உண்டு.

சென்னை மாநிலத்தில் பார்ப்பனர் அல்லாதார் இயக்கமான நீதிக்கட்சி தலை தூக்கிய கால கட்டம். பார்ப்பனர் அல்லாதாரும் சட்டமன்றம் செல்லத் தீர்மானித்த அந்தப் பொழுதில் திலகர் என்ன சொன்னார் தெரியுமா?

இப்பொழுது எல்லோரும் சட்டசபைக்குப் போக வேண்டுமென்று முயற்சி செய்கிறார்கள். எதற்காக செருப்பு தைக்கிறவனும், எண்ணெய்ச் செக்கு ஆட்டுபவனும், சிறு கடைக் காரனும், (The Cobblers, The Oil Mongers, and petty-traders) சட்டசபைக்குச் செல்ல வேண்டுமென்று முயற்சி செய் கிறார்கள்? யார் யார் எது எதற்குப் போக வேண்டுமென்ற வரைமுறை கிடையாதா? என்று பேசினாரே!

இதுகுறித்து டாக்டர் அம்பேத்கர், காந்தியும், காங்கிரசும் தாழ்த்தப்பட்ட வர்களுக்குச் செய்தது என்ன? (What Gandhi and Congress have done to untouchables) என்ற நூலில் குறிப்பிட்டுக் கண்டனம் தெரிவித்துள்ளாரே!
குளவிக் கூட்டில் கைவைக்கும் வேலையில் பார்ப்பனர்கள் இறங்கினால் அதன் வீச்சை, விளைவைச் சந்தித்துத் தான் ஆகவேண்டும்.

துக்ளக் மூலம், லட்சுமி நாராயண அய்யர் பார்ப்பன நச்சுத் தலையைக் காட்டுவதும் ஒரு வகையில் நல்லதுதான்.

அப்பொழுதுதானே பார்ப்பனர் அல்லாத நல்லிளஞ் சிங்கங்கள் அடையாளம் காணமுடியும்!

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (7) முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் முப்புரிகள்

தீண்டாமை ஒழிப்பு, இளம் விதவைகள் மறுமணம், கலப்புத் திருமணம், மது ஒழிப்பு, ஹரிஜன ஆலயப் பிரவேசம், தேவதாசி முறை ஒழிப்பு, ஆலயங்களில் ஆடு, மாடு, கோழி முதலியவற்றைப் பலியிடும் கொடுமைக்கு எதிர்ப்பு என்று பல சமுதாயச் சீர்திருத்தங்களை அன்றைய காங்கிரஸ் மகாசபை இந்தியா முழுவதும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தது. எனவே, ஈ.வெ.ரா. காங்கிரசில் இருந்து கொண்டே சீர்திருத்தப் பிரச்சாரம் செய்திருக்கலாம்

அன்றைய காங்கிரஸ் மகாசபையில் கடவுள் நம்பிக்கையற்ற சிலரும் உறுப்பினர்களாக இருந்தார்கள். நேருஜி ஒரு நாத்திகர் என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆகவே, கடவுள் மறுப்புக் கொள்கையைப் பின்பற்றிக் கொண்டே காங்கிரசில் தொடர்ந்து ஈ.வெ.ரா. பிரச்சாரம் புரிந்திருக்கலாம். எனினும், பகுத்தறிவுக்குப் பொருந்தக் கூடிய எந்த வித காரணமும் இல்லாமல் காங்கிர சிலிருந்து -ஈ.வெ.ரா. வெளியேறி விட்டார்

-என்று குற்றப் பத்திரிகை படிக்கிறார் திருவாளர் கே.சி. லட்சுமிநாராயணன் (துக்ளக் 20--7-2011) வைக்கம் போராட்டம், சேரன் மாதேவி குருகுலப் போராட்டத்தை எல்லாம் காங்கிரசில் இருந்து கொண்டே காங்கிரஸ் பார்ப்பனர்களின் எதிர்ப்பையும் முறியடித்துத்தான் தந்தை பெரியார் வெற்றி பெற்றார்.

தீண்டாமையை எதிர்த்து வைக்கத்தில் தந்தை பெரியார் போராடி வெற்றி பெற்றாரென்றால் தமிழ்நாடு காங்கிரசின் ஒத்துழைப்பால் அல்ல. இன்னும் சொல்லப் போனால் காந்தியாரின் விருப்பத்துக்கு எதிராகவே நடத்தப்பட்ட போராட்டம் அது என்பதுதான் உண்மை.

இதுபற்றி தந்தை பெரியார் அவர்கள் தெரிவித்துள்ள தகவல்கள் மிகவும் முக்கியமானவை. கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், இரணியல் ஆகிய ஊர்களில் ஆற்றிய உரை - தீண்டாமையை ஒழித்தது யார்? (திராவிடர் கழக வெளியீடு - முதற்பதிப்பு 1961) என்ற தலைப்பில் வெளியாகியுள் ளது. அதில் குறிப்பிட்டு இருப்பதாவது:

திரு. ராஜகோபாலாச்சாரியார் எனக்குக் கடிதம் எழுதினார். நீ ஏன் நம்நாட்டை விட்டு இன்னொரு நாட்டிலே (கேரளா வைக்கத்தில்) ரகளை செய்கிறாய்? அது சரியல்ல, அதை விட்டுவிட்டு நீ இங்கு வந்து, விட்டுச் சென்ற வேலைகளைக் கவனி என்று எழுதினார். அப்போது இருந்த எஸ். சீனிவாச அய்யங்காரும் இப்படித்தான் என்னை வைக்கத்திற்கு வந்தே அழைத்தார்; வரச்சொன்னார். அதே மாதிரி பத்திரிகையிலேயும் எழுதினார்கள். ஆனால் இதற்குள் சத்தியாகிரக ஆசிரமத்தில் ஆயிரம் பேருக்கு மேல் சேர்ந்தார்கள். தினமும் ஊர் முழுவதும் சத்தியாக்கிரக பஜனையும் தொண்டர்கள் ஊர்வலமும் நடந்தது; உணர்ச்சி வலுத்துவிட்டது.

பஞ்சாபில் சுவாமி சிரத்தானந்தா என்பவர் ஒரு அப்பீல் போட்டார். அதன் பிரகாரம் பஞ்சாபிலேயிருந்து சீக்கியர்கள் 20, -30 ஆட்களையும், இரண்டாயிரம் ரூபாயும் கையிலெடுத் துக் கொண்டு நேரே வைக்கத்துக்கு வந்தார்கள். தாங்கள் சாப்பாட்டுச் செலவை ஏற்றுக் கொள்ளும் ஆதர வைத் தருவதற்காக. உடனே இங்கிருந்த பார்ப்பனர்கள் எல்லாம் சீக்கியர்கள் வந்து இந்து மதத்திற்கு எதிராகப் போர் தொடுக்கிறார்கள் என்றெல்லாம் காந்திக்கு எழுதினார்கள்.

உடனே அதன் பேரில் காந்தியார் சாயபு, கிறிஸ்துவன், சீக்கியன் ஆகிய பிறமதக்காரன் எவனும் இதில் கலந்து கொள்ளக்கூடாது என்று எழுதி விட்டார்கள்.

காந்தி எழுதினவுடனே இதில் கலந்திருந்த சீக்கியன், சாயபு, கிருஸ் துவன் எல்லாம் போய்விட்டார்கள். அதுபோலவே தீவிரமாக இதில் ஈடுபட்டு முன்னோடியாக உழைத்த காலஞ்சென்ற ஜோசஃப் ஜார்ஜுக்கும், ராஜ கோபாலாச்சாரியார் கடிதம் எழுதினார். இந்து மதச் சார்புள்ள இந்தக் காரியத்தில் நீ சேர்ந்திருப்பது தப்பு என்றார்.

அதை ஜோசஃப் ஜார்ஜ் அவர்கள் லட்சியம் பண்ணாமல் திருப்பி எழுதினார்: நான் என் சுய மரியா தையை விட்டுவிட்டு இருக்கமாட் டேன். வேண்டுமானால் என்னை விலக்கிவிடுங்கள் என்றார். தற்போதைய நாகர்கோவில் பயோனீர் டிரான்ஸ் போர்ட்டைச் சேர்ந்த சேவு என்பவரும், அண்மையில் காலஞ்சென்ற டாக்டம் எம்.இ.நாயுடு (திரு எம்.எம்.பெருமாள் நாயுடு அவர்கள் இந்தப் பேச்சுக்கு முதல்நாள் இரவு நாகர்கோவிலில் காலமானார். பிறகு தந்தை பெரியார் சென்று துக்கம் விசாரித்தார் என்பதை வாசகர்கட்கு நினைவூட்டுகிறோம்.) அவர்களும் என்னுடனேயே இருந்து தொடர்ந்து நடத்துவது என்று முடிவு செய்தார்கள். அவர்கள் இதை விட்டுப் போகமாட்டேன் என்று உறுதியாகத் தெரிவித்து விட்டார்கள். என்றாலும், காந்தி சத்தியாக்கிரகத்திற்கு விரோத மாக எழுதி பணத்தையும் ஆளையும் தடுத்துவிடுவாரோ என்று சிலர் பயப்பட்டார்கள்.

அந்த சமயம் சாமி சித்தானந்தா அவர்கள் வைக்கம் வந்து, தான் பணத் திற்கு வகை செய்வதாகச் சொன்னார். பிறகு காந்தி கட்டளைக்கு விரோத மாகவே சத்தியக்கிரகம் நடந்து வந்தது.

இதற்கிடையிலே நடந்த ஒரு நிகழ்ச்சியும் கவனிக்கத் தக்கது. எங்கள் போராட்டத்திற்கு பெரிய மரியாதை யையும், செல்வாக்கையும் தேடிக் கொடுத்துவிட்டது, இந்த காந்தி கட்டளை. இந்த சமயத்தில் என்னை மறுபடியும் பிடித்து 6 மாதக் கடினக் காவல் விதித்து சிறையில் போட்டு விட்டார்கள். பிறகு சத்தியாக்கிரகத்தை நிறுத்துவதற்காகவும், எங்களை அழிப்பதற்காகவும் என்று நான் ஜெயிலிலே இருக்கிற சமயத்தில் இந்த நம்பூதிரி பார்ப்பனர்களும் சில வைதீகர்களும் சேர்ந்து கொண்டு சத்ருசங்கார யாகம் என்ற ஒன்றை வெகு தடபுடலாக ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து நடத்தினார்கள். ஒரு நாள் நடுச்சாமத்தில் தொடர்ந்து வேட்டு சத்தம் கேட்டது. நான் ஜெயிலில் விழித்துக் கொண்டிருந்தேன். ரோந்து வந்தவனைப் பார்த்துக் கேட்டேன், என்ன சேதி இப்படி வெடிச் சத்தம் கேட்கிறது? என்று கேட்டேன். இந்தப் பக்கம் ஏதாவது பெரிய திருவிழா நடக்கிறதா? என்று கேட்டேன். அதற்கு அவன் சொன் னான்: மகாராஜாவுக்கு உடம்பு சவுக் கியம் இல்லாமல் இருந்து மகாராஜா நேற்று ராத்திரி திருநாடு எழுந்து விட்டார் என்றான்.

அதாவது ராஜா செத்துப் போனார் என்று சொன்னான். அவ்வளவுதான். மகாராஜா செத்தார் என்றவுடன் எங்களுக்கு சிறைக்குள்ளாகவே ரொம்ப பெருமை வந்துவிட்டது. அவர்கள் பண்ணிய யாகம் அங்கேயே திருப்பி மகாராஜாவைக் கொன்று விட்டது என்றும் அந்த யாகம் சத்தியாக் கிரக்காரர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் மக்களிடையே இது ஒரு தனி மதிப்பை ஏற்படுத்தி விட்டது. அதன் பிறகு அரசாங்கம் எங்களையெல்லாம் ராஜாவின் கருமாதியை முன்னிட்டு விடுதலை செய்தனர். எதிரிகள் குரலும் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வர ஆரம்பித்தது.

ராணியின் ராஜி முயற்சியும், பார்ப்பனர் சூழ்ச்சியும்

ராணியும் கூப்பிட்டு எங்களோடு ராஜி பண்ணி ஒரு உடன்பாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்தவுடன் அப்போது சமஸ்தானத்தில் திவானாக இருந்த ஒரு பார்ப்பான் என்னிடத்தில் நேரே ராணி பேசக்கூடாது என்று கருதி திரு. ராசகோபாலாச்சாரிக்கு கடிதம் எழுதினான். ராச கோபாலாச்சாரியும் எங்கே என்னிடத்தில் ராணி பேசி உடன்பாட்டிற்கு வந்தால் எனக்கு மரியாதையும் புகழும் வந்து விடுமே! அந்த மாதிரி வரக்கூடாது என்று கருதி, காந்தியாருக்கே அந்த வாய்ப்பையளித்து காந்தியின் மூலமே காரியம் நடந்ததாக உலகுக்குக் காட்ட வேண்டும் என்று தந்திரம் செய்து காந்திக்கு கடிதம் எழுதினார். எப்படியாவது காரியம் வெற்றியானால் போதும்; நமக்குப் பேரும் புகழும் வருவது முக்கியமல்ல என்ற கருத்தில் நானும் ஒப்புக் கொண்டேன்.
காந்தியும் புறப்பட்டு வந்தார். ராணியோடு காந்தி பேசினார். (இப்படி இந்த சத்தியாக்கிரகம் நல்லபடி வேரூன்றி வெற்றி நிலைக்கு வந்தவுடன் பார்ப்பனர்கள் காந்தியை இதில் புகுத்தினார்கள்.)

ராணி, காந்தியோடு பேசும்போது தெரிவித்தார்கள்: நாங்கள், ரோடுகளைத் திறந்து விட்டு விடுகிறோம். ஆனால் அதை விட்டவுடன் நாயக்கர் கோயிலுக்குள் போக உரிமை வேண்டும் என்று கேட்டு ரகளை செய்தால் என்ன செய்வது? அதுதான் தயங்குகிறோம் என்றார்கள். உடனே காந்தி, டீபியில் தங்கி இருந்த என்னிடத்தில் வந்து ராணி சொன்னதைச் சொல்லி என்ன சொல்லுகிறாய்? இதை ஒப்புக் கொண்டுவிடுவது நல்லது என்றார். நான் சொன்னேன்: ரோடு திறந்து விடுவது சரி; ஆனால் அதை வைத்துக் கொண்டு கோயிலைத் திறந்துவிடும்படி கேட்க மாட்டோம் என்று எப்படி நாம் உறுதியளிப்பது? கோயில் பிரவேசம் என்பது காங்கிரசின் லட்சியமாக இல்லாவிட்டாலும், எனது லட்சியம் அதுதானே? (கோயில் நுழைவு) அதை எப்படி விட்டுக் கொடுக்க முடியும்? வேண்டுமானால் ராணிக்கு ஒரு வார்த்தை சொல்லுங்கள். இப் போதைக்கு இம்மாதிரி கிளர்ச்சி எதுவுமிருக்காது. கொஞ்சநாள் அது பற்றி மக்களுக்கு விளங்கும்படி பிரச் சாரம் செய்து கலவரத்திற்கு இடமிருக் காது என்று கண்டால்தான் கிளர்ச்சி ஆரம்பிக்கப்படலாம் என்று சொல் லுங்கள் என்று சொன்னேன்.

போராட்ட வெற்றி

அதை காந்தி, ராணியிடம் சொன்னவுடன் ராணியார், ரோடில் யார் வேண்டுமானாலும் நடந்து செல்லலாம் என்று சொல்லி பொது ரோடாக ஆக்கினார்கள் என்று தந்தை பெரியார் பேசியுள்ளார்.
தீண்டாமை ஒழிப்பில் காங்கிரசின் லட்சணம், காந்தியின் பங்கு இதுதான். இவற்றையெல்லாம் மீறிதான் தந்தை பெரியார் வெற்றி பெற்றார். அவரை வைக்கம் வீரர் என்று திரு.வி.க. எழுதி யது காங்கிரஸ் ஏடான நவசக்தியில் தான் என்பது நினைவிருக்கட்டும்.
சேரன்மாதேவியில் நடத்தப்பட்ட குருகுலத்திலும் அதன் பொறுப்பாள ரான வ.வே.சு. அய்யர் பார்ப்பன மாணவர்களுக்கு தனிப் பந்தி; பார்ப் பனர் அல்லாதாருக்கு வேறு பந்தி; உணவிலும் வேறுபாடு என்று நடத் தியதை எதிர்த்துத் தந்தை பெரியார் போராடி ஒழித்தார்.

இது தொடர்பாக 29.-4.-1925 அன்று திருச்சிராப் பள்ளியில் டாக்டர் வரத ராசலு நாயுடு அவர்கள் தலைமையில் கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் கூட்டத் தில் எம்.கே.ஆச்சார்யா என்ற பார்ப் பனர் என்ன சொன்னார் தெரியுமா?

ஒரு பிராமணச் சிறுவன், ஒரு பிரா மணரல்லாத சிறுவனுடன் உட்கார்ந்து சாப்பிட்டதாகக் கேள்வியுற்றால் நான் இதற்காகப் பத்து நாட்கள் பட்டினிக் கிடப்பேன் என்று சொன்னாரென்றால் பார்ப்பனர்கள் கூறும் தேசியமும் சுய ராஜ்யம் கோரும் உணர்வும் எந்த டிகிரி யில் இருந்தன என்பதை அறியலாம்.

வைக்கம் போராட்டமும் சரி, சேரன் மாதேவி குருகுலப் போராட்டமும் சரி- அவற்றில் தந்தை பெரியார் பெற்ற வெற்றி என்பது சாதாரண முயற்சியல்ல.

பார்ப்பனர்களையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த மக்களின் செல் வாக்கும் பெற்றிருந்த காந்தியாரையும் எதிர்த்துத் தாண்டிதான் வெற்றி பெற்றார் என்றால், அந்த தன்மையின் பரிணாமத்தைப் புரிந்து கொள்ளலாமே!

இந்து ஏட்டிலிருந்து (12-_3-_1925) இதற்கான ஆதாரத்தை எடுத்துக் காட்ட முடியும்.
இதோ இந்து ஏடு பேசுகிறது:

Walls Round Vaikom Road

(From our Special Correspondent)
Quilon, March 12, 1925

“Mr.V.V.S.Iyer of the Tamil Gurukulam at Shermadevi was at Vaikom for the past two days and had a long interview with Mahatmaji on the question of interdining the Vidyalaya. It is understood that Mahatmaji did not wish that there should be any compulsion in the matter, and if any peopil hadscruples such scruples had to be respected, Mahatmaji was also against the levelling down of the caste system,because it was a necessary implication of the Hinduism.

“Devasam Commissioner Mr. Raja Raja Varma also interviewed Mahatmaji yesterday with orthodox pundits and discussed the situation at Vaikom. It appears that the Devasom authorities contemplating raising another wall to cover the temple roads on the four sides thus effectively preventing not only untouchables but also Christians and Mohammodans from entering the prakarams.”

கிலான் மார்ச் 12 (1925)

வைக்கத்தில் தங்கியிருந்த காந்தி யாரை திரு.வ.வே.சு. அய்யர் சந்தித்து சேரன்மாதேவி குருகுலத்தில் சமபந்தி போஜனம் நடைபெற்றாக வேண்டும் என்று ஒரு சாரார் வற்புறுத்தி வருவதைப் பற்றி கருத்துக் கேட்டார். அதற்குக் காந்தியார், சமபந்தி போஜனம் என்பது வற்புறுத்தலின் அடிப்படையில் நடக்கக்கூடாது. ஒரு சாரார் மற்றவர் களோடு கலந்து அமர்ந்து சமபந்தி போஜனம் செய்ய விரும்பவில்லை என்றால் அவர்களின் அந்த உணர்வு மதிக்கப்பட்டாக வேண்டும் என்றார். சாதி என்பது ஒழிக்கப்பட்டு சரிசமமாக ஆக்கப்பட வேண்டும் என்பதை மகாத்மாஜி விரும்பவில்லை. ஜாதி அமைப்பு என்பது இந்திய சமூகத்தின் முக்கிய அம்சம். இதுதான் காந்தியாரின் ஜாதி வர்ணாசிரமப் பார்வை!

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்

வைக்கம் தேவஸ்தான கமிஷனர் திரு ராஜவர்மா சில வைதீகப் பண்டிதர் களுடன் சென்று மகாத்மாவைச் சந்தித்து வைக்கத்தில் நிலவி வரும் சூழ்நிலையை விவரித்தார்

விவாதத்திற்குப் பின்பு தேவஸ்தான அதிபதிகள் தீண்டத்தகாதவர்கள் மட்டுமல்ல, கிருஸ்தவர்கள், முஸ்லிம் களும் கூட கோயில் பிரகார வீதிகளில் நுழையா வண்ணம் கோயிலைச் சுற்றி நான்கு புறங்களிலும் மற்றொரு சுவரை எழுப்புவது பற்றி ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. என்று இந்து ஏடு கூறுகிறது.

வைக்கத்தில் காந்தியார் சாதித்தது ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் கதைதான்!
சேரன்மாதேவி பிரச்சினையிலும் காந்தியார் பார்ப்பனர்கள் பக்கமே - ஜாதியின் பக்கமே நின்றார் என்பதையும் இந்து செய்தி தெரிவிக்கிறதே! இவர் களை எல்லாம் எதிர்கொண்டே பெரி யார் வென்றார் என்றால் அத்தகை மையை - திடத்தை -ஆசாபாசமின்றி எடை போட்டுப் பார்க்கட்டும்-அறிவாளிகள் எனப்படுவோர்.

தந்தை பெரியாரை எப்படி நடத்தினார்கள்?

தாழ்த்தப்பட்டவர்களைப் பார்ப்பனர்கள் நடத்தியது ஒரு புறம் இருக்கட்டும். தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவராகவும் செயலாளராகவும் பணியாற்றிய பெரும் புகழ் ஓச்சிக் கொண்டிருந்த பெரியாரையே எப்படி நடத்தினார்கள் இந்தப்பார்ப்பனர்கள்? இதோ பெரியார் எழுத்தாலேயே அதனைத் தெரிந்து கொள்ளலாமே!

காங்கிரஸ் அங்கத்தினரில் ஜாதி வித்தியாசம் பாராட்டப்பட்டதில்லை என்று ஒரு நண்பர் சொன்னார். என்னுடைய சொந்த அனுபோகத்தை இங்கு எடுத்துச் சொல்வதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். அதாவது நானும் உயர்திரு எஸ். சீனுவாச அய்யங்காரும் காங்கிரஸ் பிரச்சார விஷயமாய்த் திண்டுக்கல்லுக்குப் போனபோது ஒரு பார்ப்பனர் வீட்டுக்குப் போயிருந்தோம். அந்தக் காலத்தில் நான் வேறாக வைத்தே சாப்பாடு போடப்பட்டேன். ஆனாலும் பகலில் சாப்பிட்ட இவை அப்படியே இருக்க அதன் பக்கத்தில் தான் இரவும் இலை போடப்பட்டுச் சாப்பிட்டேன்.

மற்றொரு சமயம் நானும், தஞ்சை திருவேங்கடசாமிப் பிள்ளையும் காங் கிரஸ் பிரச்சாரமாகப் பெரியகுளத் திற்குப் போனபோதும் ஒரு காங்கிரஸ் பார்ப்பனர் வீட்டில் இறக்கப் பட் டோம். அப்போது காலைப் பலகாரம் சாப்பிட்ட எச்சில் இலைக்குப் பக்கத் தில் பகல் சாப்பாடும், பகல் சாப்பாடு, காலை பலகாரம் சாப்பிட்ட எச்சில் இலைக்குப்பக்கத்தில் இராத்திரி சாப்பாட்டுக்கும் இலை போடப்பட்டு எறும்புகளும், பூச்சிகளும், ஈக்களும் மொய்த்துக் கொண்டிருக்கவே சாப் பிட்டு வந்தோம். (குடிஅரசு _ 10_1-_1948) இதுதான் காங்கிரஸ் பார்ப்பனர் களின் சீர்திருத்த உணர்வோ! எந்தத் தைரியத்தில் எழுதுகிறார் ஸ்ரீமான் லட்சுமிநாராயண அய்யர்?
குழந்தைகள் திருமணத் தடுப்பிலும் கூட அன்றைய காங்கிரஸ் பார்ப் பனர்கள் எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டனர். 8 வயதுப்பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் சுவர்க்க வாசத்தையும், 9 வயதுப் பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் வைகுண்டத்தையும், 10 வயதுப் பெண்ணை விவாகம் செய்து கொடுப் பவன் பிரம்ம லோகத்தையும் அடை கிறான். அதற்கு மேற்பட்டு பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் நகரத்தையே அடைகின்றான் என்று பராசர் சொல்லியிருக்கிறார் என்று கூச்சல் போட்டார்கள்.

ஆஜ்மீர் - மெர்வாராத் தொகுதியில் இருந்து டில்லி சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான ராவ் சாகிப் ஹரி விலாஸ் சாரதா என் னும் அறிஞர் 1-_2_-1927 இல் இந்துக் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் திருமண வயதுச் சீர்திருத்த மசோ தாவை முன்மொழிந்தார். ஏழரை மாதங்களுக்குப் பிறகு (5_-9_-1927) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட் டது. பெண்களின் திருமண வயது 13 என்று ஆக்கப்பட்டது. காங்கிரஸ்கார ரான எம்.கே. ஆச்சாரியார் என்ற பார்ப் பனர் என்ன சொன்னார் தெரியுமா?

பால்மணம் இல்லாவிட்டால் உண்மையான கற்பு என்பது சாத்திய மில்லை. பெண்களின் வாழ்க்கை நரக மாகி விடும். குடும்ப வாழ்க்கை துக்கமய மாக ஆகி சதா ஆபத்துக்குள்ளாகி இருக்கும் . புருஷர்களுக்குச் சிறைத் தண் டனை அளித்துவிடுவதால் பெண்கள் நடத்தையும் அதிகக் கேவலமாக ஆகிவிடும். எனவே பால்மணம் இருந்தாலொழிய வாழ்க்கையில் உண்மையான ஒழுக்கம் ஏற்படுவது அசாத்தியம்! என்று அவிழ்த்துப் போட்டு ஆடாத குறையாகச் சத்தம் போட்டார். இன்னொரு தேசியத் திலகம் இருக்கவே இருக்கிறாரே - வாயாடி சத்தியமூர்த்தி அய்யர். அந்தப் பெருமான் என்ன முழங்கினார்?

அரசாங்கம் இந்துக்களுடைய விவாகத்தில் தலையிட்டால் இந்துச் சமூகமே கெட்டு, இந்து மதமே பாழாகிவிடும். பெண்களுக்கு 10, 12 வயதுக்கு முன்னமேயே திருமணம் செய்து விட வேண்டும், இல்லையேல் பாவம் வந்துசூழும் என்று பராசரர் எழுதியிருக்கிறார். நாங்கள் பாவத் திற்குப் பயப்படுவோமா? அல்லது உங்கள் சட்டத்திற்குப் பயப்படுவோமா? என்று சம்மத வயதுக் கமிட்டியின் முன்பு வாதிட்டார்.

இந்தச் சட்டம் வருவதற்கு முன்பு இருந்த நிலை என்ன? ராமகிருஷ்ண பரமஹம்சரே 5 வயதுப் பெண்ணைத் தானே திருமணம் செய்து கொண்டார். காந்தியார் திருமணம் செய்து கொண்ட போது அவருக்கு வயது 13 கஸ்தூரி பாவுக்கு வயது ஏழு.

தங்களுக்குப் பயன்படாத நேரத்தில் வெள்ளைக்காரனை மிலேச்சர்கள் என்பார்கள் பார்ப்பனர்கள். ஆனால் அவன்தான் குழந்தைகள் திரும ணத்தையும், கணவன் இறந்தால் அவ னோடு அவன் மனைவியையும் தீயில் தள்ளி எரிக்கும் உடன்கட்டை என்னும் சதியையும் ஒழித்துக் கட்டினான் என்பதை மறுக்க முடியுமா?

காங்கிரஸ்காரர்களின் சீர்திருத்த உணர்வுகள் இந்தக் கேடு கெட்ட நிலையில் இருக்க, காங்கிரசில் இருந்து கொண்டே பெரியார் சீர்திருத்தங்களைச் செய்து கொண்டிருக்கலாம் என்றும் பகுத்தறிவிற்குப் பொருந்தக் கூடிய எவ்விதக் காரணமும் இல்லாமல் காங்கிரசிலிருந்து ஈ.வெ.ரா. வெளியேறி விட்டார் என்றும் துக்ளக்கில் திருவாளர் கே.சி. லட்சுமி நாராயண அய்யர்வாள் எழுதியிருப்பது எவ்வள வுப் பெரிய பிதற்றல்! - பொய்யிலே திளைத்த புழு போன்றது என்பதை இவற்றின் மூலம் அறியலாமே!